மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை
மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை 1. மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை என்றால் என்ன ? 1930- ஆம் ஆண்டு செப்டம்பர் 20- ம் நாள் அகில உலக கத்தோலிக்கத் திருச்சபையோடு மறு ஒன்றிப்படைந்த ஒரு கிழக்கத்திய கத்தோலிக்க திருச்சபையே மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை ஆகும். 2. மலங்கரை என்பதன் பெயர்க்காரணம் என்ன ? இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தூய தோமா கி.பி. 32 ல் தமிழகத்தின் (இன்றைய கேரளாவில்) மாலியங்கரை என்ற இடத்தில் மறைபணி செய்ய வந்தார். இப்பகுதியில் உருவான கிறிஸ்தவ சமூகமே , மாலியங்கரை என்ற பெயரிலிருந்து மருவி மலங்கரை திருச்சபையினர் என அழைக்கப்படுகின்றனர். 3. மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை உருவாதல் மலங்கரை திருச்சபையை சார்ந்த பேராயர் கீ வர்கீஸ் மார் இவானியோஸ் , ஆயர் யாக்கோபு மார் தியோபிலோஸ் , அருட்தந்தை ஜாண் குழினாப்புறத்து OIC , திருத்தொண்டர் அலக்சாண்டர் OIC மற்றும் சாக்கோ கிளிலேத்து ஆகிய ஐவரும் கொல்லம் ஆயர் அலோஷியஸ் மரிய ...