Posts

Showing posts from March, 2022

3.4.2022 சமியோ ஞாயிறு (பார்வையற்றவருக்குப் பார்வை வழங்குதல்) தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு மாற் 10:46-52; இச 25:13-19; யோபு 42:1-9; 1 அர 3:4-15; எரே 51:10-19; 1 பேதுரு 4:12-19; உரோ 14:10-23; யோவா 9:1-41

Image
  சமியோ ஞாயிறு (பார்வையற்றவருக்குப் பார்வை வழங்குதல்) தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு மாற் 10:46-52; இச 25:13-19; யோபு 42:1-9; 1 அர 3:4-15; எரே 51:10-19; 1 பேதுரு 4:12-19; உரோ 14:10-23; யோவா 9:1-41 (அடுத்து வரும் வெள்ளிக் கிழமை நாற்பதாம் வெள்ளியாகும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஓசானா திருநாள், குருத்தோலை மற்றும் பூக்கள் கொண்டுவர இறைமக்களை நினைவூட்டவும்) உரோ 14:10-23 10 அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா? 11 ஏனெனில், "ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! 12 ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர். 13 ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். 14 தன்னிலேயே எப்பொருளும்...

27.3.2022 ஞாயிறு க்பிப்தோ ஞாயிறு (கூன் விழுந்த பெண்ணை குணமாக்கியது) தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு லூக் 10:25-37; தொநூ 9:1-7; சீஞா 51:1-10; எரே 51:1-9; எசா 50:1-5;1 பேதுரு 3:8-17; உரோ 12:1-15; லூக் 13:10-17

Image
க்பிப்தோ ஞாயிறு (கூன் விழுந்த பெண்ணை குணமாக்கியது) தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு லூக் 10:25-37; தொநூ 9:1-7; சீஞா 51:1-10; எரே 51:1-9; எசா 50:1-5; 1 பேதுரு 3:8-17; உரோ 12:1-15; லூக் 13:10-17 உரோ 12:1-15; 1 சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்; கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. 2 இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். 3 இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது; உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும். 4 ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. 5 அது போலவே, நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோட...

25.3.2022 வெள்ளி மங்கள வாழ்த்துத் திருநாள் (இறைமக்களுக்கான திருப்பலி) யோவா 1:14-16; தொநூ 3:8-19; நீத 13:2-14; செக் 4:1-7; எசா 64:1-7; 1 யோவா 3:1-10; எபி 6:13-20; லூக் 1:26-38

Image
மங்கள வாழ்த்துத் திருநாள் (இறைமக்களுக்கான திருப்பலி) யோவா 1:14-16; தொநூ 3:8-19; நீத 13:2-14; செக் 4:1-7; எசா 64:1-7; 1 யோவா 3:1-10; எபி 6:13-20; லூக் 1:26-38 எபி 6:13-20; 13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு, 14 "நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்" என்றார். 15 இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். 16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும். 17 அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிபடுத்தினார். 18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்ட...

II . ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பற்றிய வினா விடைகள் (அதிகாரங்கள் 11-17 வரை) தயாரிப்பு Fr. ஜோஸ் கிராத்தூர்

Image
  11. மார்த்தாண்டத்தில் ஆயர் 1. எந்த ஆண்டு ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்களின் இருப்பிடம் திருவனந்தபுரம் பேராயர் இல்லத்திலிருந்து மார்த்தாண்டத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது?                  1983 ம் 2. எந்த பங்கு மேடையின் மேல்பகுதியில் சிறு வசதிகளைச் செய்து கொடுத்து அங்கு தங்கும் படி பேராயர் கட்டளையிட்டார்?                  மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் 3. கேரள தமிழக எல்லையாகிய எந்த இடத்தில் ஏராளமான கார்களுடன் தலைவர்களும் , பெரியவர் களும் ஏராளமாக கூடி வரவேற்றனர்.             களியக்காவிளையில் 4. ................................ என்ற வாழ்த்தொலிகளால் ஆயரை மக்கள் வரவேற்றனர்          '' ஜெய் ஜெய்! மார் எப்ரேம்! ஜெய் ஜெய்! மார் எப்ரேம்! 5. எந்த ஆண்டு முதல் தன் இறப்பு வரை அவர் மார்த்தாண்டத்திலேயே நிரந்தரமாக தங்கியிருந்தார்.  ...