II . ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பற்றிய வினா விடைகள் (அதிகாரங்கள் 11-17 வரை) தயாரிப்பு Fr. ஜோஸ் கிராத்தூர்

 



11. மார்த்தாண்டத்தில் ஆயர்

1. எந்த ஆண்டு ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்களின் இருப்பிடம் திருவனந்தபுரம் பேராயர் இல்லத்திலிருந்து மார்த்தாண்டத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது?

                 1983ம்

2. எந்த பங்கு மேடையின் மேல்பகுதியில் சிறு வசதிகளைச் செய்து கொடுத்து அங்கு தங்கும் படி பேராயர் கட்டளையிட்டார்?

                 மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம்

3. கேரள தமிழக எல்லையாகிய எந்த இடத்தில் ஏராளமான கார்களுடன் தலைவர்களும், பெரியவர் களும் ஏராளமாக கூடி வரவேற்றனர்.

            களியக்காவிளையில்

4. ................................ என்ற வாழ்த்தொலிகளால் ஆயரை மக்கள் வரவேற்றனர்

         ''ஜெய் ஜெய்! மார் எப்ரேம்! ஜெய் ஜெய்! மார் எப்ரேம்!

5. எந்த ஆண்டு முதல் தன் இறப்பு வரை அவர் மார்த்தாண்டத்திலேயே நிரந்தரமாக தங்கியிருந்தார்.

             1983-ஆம்

6. ஆயர் தம் இயலா நிலையை பலமுறை எவ்வாறு எடுத்துக் கூறினார்.

              ''பால் வற்றிப்போன பசு'' என்றும் "சக்கை நீக்கி பிலாவு பாட்டம் கொடுத்திருக்கின்ற நிலைதான் எனக்கு'' என்றும்

7. 1986-ஆம் ஆண்டு மலங்கரை சிறியன் கத்தோலிக்க பள்ளிக்கூடங்களில் பணிபுரிந்து வந்த எத்தனை ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் கொடுக்கப்பட்டது?

              30-க்கும் மேற்பட்ட

8. தந்தை வர்கீஸ் மாவேலில் திடீரென பங்குகளை விட்ட சென்ற காரணத்தால் மார்த்தாண்டம், சிதறால், குழித்துறை ஆகிய பங்கு பணிகளை கவனிக்க யார் பணிக்கப்பட்டார்?

             ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

9. யார் தாமாக முன் வந்து விருப்பம் தெரிவித்தபடியால் பேராயரால் மார்த்தாண்டம் பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார்?

          தந்தை டோமினிக் சக்கரியாஸ்

10. 1987-ஆம் ஆண்டு கீழை திருச்சபைகளின் தலைவர் யார் கேரள சபையை சந்திக்க வருகைதந்தார்.

            கர்தினால் லூர்து சாமி அவர்கள்

11. யார் தலைமையில் கர்தினால் லூர்து சாமி அவர்களை வரவேற்க வரவேற்பு பணிகள் நடந்தன.

            தந்தை பிறேம்குமார்

12. ஆயர் இலாறன்ஸ் அதிக தேவையிலிருக்கின்ற மக்கள் எங்கு இருக்கின்றார்களோ, அங்கே அவர்களைத் தேடிச் சென்று எப்படிபட்ட மையங்களை ஏற்படுத்துவது வழக்கம்.

              பணிபுரியும் மையங்களை

13. முன்பின் பழக்கமில்லாது, எங்கிருந்தோ வந்து ஒருவர் இப்படி பொறுப்புடனும், அன்புடனும் பணிகள் செய்து திரும்பிச் சென்றது எந்த ஊர்  ஏழை மக்களின் கவனத்தை கவர்ந்தது.

                           பதினெட்டாம்படி

14. யார் தம் டாக்டர் பட்ட ஆய்வு நடத்தியிருந்த வேளையில், ஆயர் இலாறன்சின் Health for One Million திட்டத்துடன் நன்கு ஈடுபட நேர்ந்தது.

            திரு. தோமஸ் குட்டி பனச்சிக்கல்

.15. 1987- நவம்பர் 17ம் நாள் டாக்டர் தோமசின் தாய் இறையடி சேர்ந்தபோது. ஆயர் இலாறன்ஸ் நீண்ட தூரம் பயணம் செய்து எங்கு சென்று அவரை ஆறுதல் படுத்தினார்.

            பத்தனம்திட்ட மாவட்டத்தில் வள்ளிக்கோடு கோட்டயத்தில் உள்ள அவர் வீட்டிற்கு

16. இவ்வுலக செல்வங்கள் யாரை அதிகமாக நெருங்கச் செய்ய வேண்டும் என்று ஆயர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

                இறைவனை

17. தனி நபர்களை அங்கீகரிப்பதற்கும், வளரச்செய்வதற்கும் யாருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

               ஆயர் இலாறன்ஸ்

18. மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா ஆலயத்தின் பங்குத் திருவிழா எந்த மாதம் 23ம் தேதி கொண்டாடப்படும்.

                 நவம்பர்

19. எப்போது குழித்துறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

            நவம்பர் மாதம் 12ம் நாள் அதிகாலை 4 மணிக்கு

20. குழித்துறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த்தால் எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டன.

            மாற்தாண்டம், குழித்துறை, சிதறால், உண்ணாமலைக்கடை, தச்சன்விளாகம், திக்குறிச்சி, ஆற்றூர்

21. ஆயர் இலாறன்ஸ் அவர்கள் உடனடியாகக் கொடுத்த தகவலின்படி ஜெர்மனியிலுள்ள எந்த நிறுவனத்தார் உடனடியாக தங்கள் பிரதிநிதி ஒருவரை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பினார்கள்.

                Maltesar

22. அரசுக்கும் செய்ய முடிந்ததை விட வெள்ளம் பெருக்கெடுத்த்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமான நன்மையை யார் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் நடந்தது.

             ஆயர் இலாறன்ஸ்

 

23. மக்களின் வேதனையை தாமும் மனதார உணர்ந்து அவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்ளும் நல்ல மனித நேயம் யாரிடம் காணப்பட்டது.

             ஆயர் இலாறன்ஸ்

 

12. இயற்கைச் சூழலில் இறைவழிபாடு

1. ஆயர் இலாறன்ஸ் இறைபிரசன்னத்தைக் கண்டவர்.

           இயற்கையில்

2. இயற்கை சூழலை உள்ளபடியே அதை எந்த இடங்களாகவும் ஆயர் இலாறன்ஸ் மாற்றிக்கொண்டார்.

          இறைவழிபாட்டு

3. கன்னியாகுமரி மடத்தின் முன். ஆயர் இலாறன்ஸ் ஏன் அருட்சகோதரிடன் நன்கு கோபப்பட்டார்.

           மஞ்சள் பூக்கள் பூத்து நின்றிருந்த செடியின் ஒரு கொப்பை முறித்துவிட்டார்

4. மருந்து வாழ் மலைப்பகுதியில் நேரடியாக வேலை செய்து எதை நட்டார்.

            சூபாபூள் மற்றும் மரக்கன்றுகளை

5. ஆடு, மாடுகளிடமிருந்து செடிகளையும், மரங்களையும் சிறு கன்றுகளையும் பாதுகாக்க நெடுங்காடு கோயிலில், முன் உபதேசியாராயிருந்த யாரை மந்தாரம்புதூரில் தங்கி பாதுகாக்க வைத்தார்.

            திரு. புன்னூசை

6. 1992 - 93 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருது யாருக்கு கிடைத்தது.  

            திரு. கிறிஸ்டல் ஜாண் ஆசிரியருக்கும் அருட் சகோதரி சாவியோ D.M.

7. திரு. கிறிஸ்டல் ஜாண் ஆசிரியருக்கும் அருட் சகோதரி சாவியோ D.M. இவர்களுக்கு யார் தங்க பதக்கம் வழங்கி கௌரவித்தார்

            பேராயர்

 

8. எங்கு ஆயரைப் பார்த்து ''உங்களுக்கு இங்கிருந்து போகலாம்'' என்று கூறி விரட்டினர்.

              தோவாளை

.9. மலங்கரை திருவழிபாட்டு முறைகளை தமிழில் மொழிபெயர்த்து எளிய முறையில் திருச்சடங்குகள் நடத்துவதற்கு யார் ஆயருக்கு உதவினார்கள்

             அருட் சகோதரி எமிலியானா

10. யார் மாலை வேளையில் ஆயரின் வசதிப்படி தமிழ் பாடங்களை கற்றுக் கொடுத்தார்.

            திரு. தேவதாஸ் ஆசிரியர்

11. ஆயரும், மற்றும் சில சகோதரர்களுடன் எந்த மலை ஏறி சிலுவைப்பாதை நடத்தியிருந்தனர்.

            மருந்துவாழ்

12. எந்த பகுதியில் கடலோடு சேர்ந்த ஒரு பாறையில் மலங்கரை சிலுவை கொத்தப்பட்டிருக்கிறது.

            கோவளம்

13. எந்த இடத்தில் மலங்ரை வழிபாட்டு முறைப்படி தவக்காலம் ஆரம்பிக்கின்ற ஒப்புரவு திருச்சடங்கு (சுபுக்கோனோ) நடத்தியிருந்தார்.

            கோவளம்

14. எந்த இடம் ஆயருக்கு திபேரியக் கடல் அனுபவமாக இருந்தது

            கோவளம்

15. எந்த ஆண்டு கன்னியாகுமரியிலுள்ள காட்டு நாயக்கன் தெருவில் முதியோர் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

            1979-ஆம்

16. எந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு ஆயர் இலாறன்ஸ் கன்னியாகுமரி மலங்கரை பவனை அடைந்தார்.

          1989

17. ''பயணம் செய்யும் போது, யாராவது விபத்துக்குள்ளாகியோ, நோய்வாய்ப்பட்டோ காண நேர்ந்தால் உடனே தன் காரில் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார் என்று யார் யாரை குறித்து கூறியது.

          திரு . பாபு ஆயரைப்பற்றி

18. ஆயர் எந்த இடம் வழியாக வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் அடிபட்ட  ஒருவரை  மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல தனது காரில் ஏற்றினார்.

            மண்ணன்தல

19. எந்த திட்டத்தின் கீழ் 1984-ஆம் ஆண்டு நாகர்கோவில் பகுதியில் ஊனமுற்ற பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

            Unicef -ன்

20..கன்னியாகுமரி மலங்கரை பவனில் வைத்து மங்கலாபுரம் குருமடத்தில் பயின்ற தந்தையரின் கூட்டத்தில்  எத்தனை தந்தையர்கள் பங்குபெற்றனர்.

            30 தந்தையர்கள்

 

13. வரம்புகளை கடந்த தோழமை

1. ஷில்லாங்கில் வைத்து இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை நடைபெற்ற ஆண்டு எது?

 1989 நவம்பர்

2. 1989-ம் ஆண்டு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை எங்கு வைத்து நடைபெற்றது?

ஷில்லாங்கில்

3. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டத்தில் ஆயருக்கு எந்த பதவி கொடுக்கப்பட்டது?

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலர்

4. "கன்னியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினால் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது எளிதாகிவிடும்" என்று கூறியவர் யார்?

ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

5. சிஸ்டேழ்ஸ் யாராக மாறக்கூடாது என்று ஆயர் கூறுவார்?

வேலைக்காரிகளாக

6. கன்னியர்கன் யாருடைய பங்கினை செயலாற்ற வேண்டும் என்று ஆயர் கூறினார்?

கானாவூர் திருமணவீட்டில் மாதாவின் பங்கினை

7. மந்தாரம்புதூரில் முதலில் இறையழைத்தல் முகாம் நடைப்பெற்ற ஆண்டு?

1990

8. மந்தாரம்புதூரில் நடைபெற்ற இறையழைத்தல் முகாமில் ஆயருடன் கலந்து கொண்ட பேராயர் யார்?

பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்

9. 1996-ம் ஆண்டு புனித வார திருச்சடங்கில் பங்கு கொள்ள ஆயர் தன்னுடன் யாரை அழைத்து சென்றார்

சகோதரர்.பத்றோஸ்

10. ஆயரின் முயற்சியால் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட பாலர் பள்ளி எந்த இடத்தில் உள்ளது?

மெஞ்ஞானபுரத்தில்

11. ஆயரின் முயற்ச்சியால் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட பாலர் பள்ளியில் ஆயாவாக பணிபுரிந்தவர் யார்?

திருமதி. நல்லாயி

12. "Malangara Student's Scholarship Scheme" தொடங்கப்பட்ட ஆண்டு?

1986 மே 4-ம்
தேதி

13. “Malangara Student's Scholarship Scheme" என்ற திட்டத்தின் நோக்கம் என்ன?

"Talent Searching"

14. "Malangara Student's Scholarship Scheme" என்ற திட்டத்தின் பொறுப்பாளர்களைப் பார்த்து ஆயர் அடிக்கடி நினைவுப்படுத்துவது என்ன?

“Follow the child till it comes to the top”

15. “Malangara Student's Scholarship Scheme” என்ற திட்டத்தின் பரிசளிப்பு விழா நடந்த ஆண்டு?

1991

16. நாடார் மகாஜன சங்கம் நிறுவப்பட்ட இடம்

மதுரை

17. நாடார் மகாஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1916

18. நாடார் மகாஜன சங்கத்தின் 57-வது மாநாடு எந்த ஆண்டு நடைப்பெற்றது 1989 மே 28-ம் நாள்

19. நாடார் மகாஜன சங்கத்தின் 57-வது மாநாடு எங்கு வைத்து நடைப்பெற்றது? இராஜபாளையத்தில்

20. நாடார் மகாஜன சங்கத்தின் 57-வது மாநாட்டில் ஆயருக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் என்ன?

"கல்வி தந்தை"

21. பார்வதிபுரத்தில் ஒரு மிஷன் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆயர் யாரிடம் கூறினார்

Sr. மெல்காவிடம்

22. பார்வதிபுரத்தில் இருக்கும் ஆலயத்தின் பெயர் என்ன?

தைநேசி மாதா ஆலயம்

23. ஆயரின் சிறப்பான கவனம் எதிலிருந்தது

மலங்கரை கத்தோலிக்க சபையின் தனித்தன்மைகளை பாதுகாப்பதில்

24. திருப்பலிக்கு பத்திரா(புளியாத அப்பம்) இருப்பதை கண்ட ஆயர் ஓட்டுநரை கன்னியாகுமரிக்கு அனுப்பி எதை எடுத்துவருமாறு கூறினார்?

ஹமீறாயா

25. பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம் நடைபெறாமல் இருக்கும் மகளிருக்கு ஒரு தீர்வு காண ஆயரால் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி எது?

"ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டம்''

26. ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டத்தில் ஒரு ஏழை பெண்ணுக்கு எவ்வளவு ரூபாய் வழங்கப்பட்டது?

3000

27. ஏழை பெண்கள் திருமண உதவித்திட்டத்தின் வழியாக எத்தனை ஆண்டுகள் சுமார் எத்தனை பெண்கள்?

18 ஆண்டுகள், 250 பெண்கள்

28. பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் குருத்துவ பொன்விழா நடைபெற்ற ஆண்டு? 1993

29. பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் குருத்துவ பொண்விழாவில் எத்தனை தம்பதிகளுக்கு ரூபாய் 10,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டது?

50

30. பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் குருத்துவ பொண்விழா எங்கு வைத்து நடைப்பெற்றது?

மார்தாண்டம் CSI சிங்களயர் அரங்கில் வைத்து

31. புதுநன்மை பெறும் பிள்ளைகள் எதை பெற தவறிவிடக்கூடாது என ஆயர் கூறினார்?

இறை அனுபவம் பெற

14. தனிநபர் மீது காட்டிய அக்கரை

1. யாருடைய அப்பாவின் 41-ஆம் நினைவு நாளில் அருட் தந்தையருடன் அவர் கல்லறைக்குச் சென்று திருப்பலியாற்றினார்.

          அருட் சகோதரி எமிலியானா.

2. ஆயர் லாரன்ஸ் எதை கண்டுபிடிப்பதிலும், ஆரம்பிப்பதிலும் ஆர்வமுடையவர்

          மறைபரப்பு தளங்கள்

3. திரு. துரை ராசையா எந்த ஊரை சார்ந்தவர்

           வடக்கு பகவதிபுரம் அருகிலுள்ள ஜேம்ஸ் டவுணைச் சார்ந்தவர்     

4. திரு. துரை ராசையா எந்த ஆண்டு ஆயர் லாரன்ஸ் அவர்களை நேரடியாக சந்தித்து ஒரு கத்தோலிக்க வழிபாட்டு இடம் வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.

      1986-ஆம் ஆண்டு    

5. 'தாமாக வந்து சபை தொடங்க வழி வகுத்த திரு. துரை ராசையா போன்றோர் கடவுளால் அனுப்பப் படுகின்றவர்கள். இது கடவுளின் செயல். மனித முயற்சி அல்ல'' என்று யார் அடிக்கடி அறிவுறுத்துகிறார்.

        ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

6. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் எந்த ஆண்டு மலங்கரை சபைத் தலைவர்களுடன் 'Ad limina' சந்திப்பிற்காக உரோமுக்குச் சென்று திருத்தந்தையை சந்தித்தார்.

          1995-ஆம்

7. திருத்தந்தை ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவருக்கு வழங்கிய பரிசுகள் யாவை

         பூசை பாத்திரங்கள் (திருத்தட்டம், திருக்கிண்ணம்)

8. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் ஜெர்மனிக்கு செல்லும் போது விமலபுரத்தைச் சார்ந்த யார் மிகுந்த ஆதரவும், ஒத்துழைப்பும் அவருக்கு கொடுத்திருந்தனர்.

           திரு. சில்வஸ்டரும் அவரது குடும்பமும்

9.  மனிதனின் ஆன்மீக, சமூக, சுகாதார நன்மையை பெருக்கும் நோக்குடன் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் எந்தெந்த வெளிநாடுகளை சந்தித்திருக்கின்றார்.

            சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங்

10. எந்தெந்த மொழிகளை ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் கற்றிருந்தார்.

             மலையாளம், ஆங்கிலம், தமிழ், இலத்தீன், சிரியன், இத்தாலியன், ஜெர்மன்

11. எந்த ஆண்டு ஆயர் லாரன்ஸ் மறைபரப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம்.

            1983-ஆம்

12.  மலங்கரை சபை அவ்வளவாக பிரபலமடையாத எந்த பகுதிகளில் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் கவனம் சென்றது.

            நாகர்கோவிலைச் சுற்றிய

13. ஆளூர் புன்ன விளையில் எந்த பெயரில் பெரியவர் ஒருவர் தன் குடும்பத்துக்காக ஒரு சிறு ஆலயம் வைத்து நடத்தி வந்தார்.

             லண்டன் மிஷன் என்ற

14. ஆளூர் சபையில் ஆலயம் எந்த  ஆண்டு பெரிதாக கட்டப்பட்டு இன்று புதுப் பொலிவுடன் விளங்குகிறது.

              1991-ஆம்

15. யாரை அழைத்துக்கொண்டு ஆயர் கன்னியாகுமரியில் கோவளம் அருகில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் இருக்கும் ஒரு பாறைப்பகுதிக்கு சென்றார்.

           திரு. கிறிஸ்டல் ஆன்றணியையும் வேறு சிலரையும்

16. 1997 ஜனவரி மாதம் ஆயர் யாருடன் மருந்துவாழ் மலைக்கு உல்லாசப் பயணம் சென்றார்.

             மேரி மக்கள் சபை ஆஸ் பிரன்ஸ்க ளுடன்

17. சமூகத்தில் யார் மீது அவருக்கு தனிப்பட்ட அக்கறை இருந்தது.

             துன்பம் அனுபவிக்கின்ற பெண்கள்

18. மருந்துவாழ் மலைஉல்லாசப் பயணத்தில் எதை பற்றியே போதித்தார்.

             'தாய்-சேய்'

19. ஆயர் லாரன்சுக்கு ஒருமுறை இதய அறுவை சிகிட்சையை திருவனந்தபுரத்திலேயே செய்து முடித்தப்பின் 13.5.1993 அன்று சென்னையிலுள்ள எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.

             விஜயா

20. அறுவை சிகிட்சைக்கு முந்தைய நாள் யார் மருத்துவ மனையில் சென்று ஆயரை சந்தித்து ஜெபித்தார்.

            பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்

21. ஆயர் லாரன்ஸ் பேராயரிடம் கேட்டு எந்த அருட் சாதனத்தைப் பெற்றுக் கொண்டார்.

            நோயில் பூசுதல்

 

 

15. திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகர்

1. பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை இவ்வுலகிலிருந்து விடைப்பெற்ற
ஆண்டு?

1994 அக்டோபர் திங்கள் 10-ம் நாள் -

2. பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையை தொடர்ந்து

திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகாராக
பொறுப்பேற்றவர் யார்?

ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்

3. “பறஞ்ஞால் கேள்குந்தவனெ கண்டால் தொழில்கணம்என்பதன் பொருள்?

இதை செய் அதை செய் எப்போதும் கூற வேண்டி வருகின்ற
நபரை ஒன்றுக்கும் உதவாது என்பது பொருள்

4. நிதிதுறையை பொறுத்தவரையில் ஆயரின் திட்டம் எதுவாக இருந்தது?

உயர் மறைமாவட்ட கடனை தீர்ப்பது

5. உயர் மறைமாவட்ட கடனை ஆயர் எத்தனை வகைகளாக பிரித்தார்?

மூன்று

6. எந்த ஆண்டு கிரேக்க கத்தோலிக்க மறைமுதுவர் மார்க்சிமூஸ் ஐந்தாம் ஹக்கிம், சிறியாவின்
டமாஸ்கசில், கன்னியர் மடம் ஆரம்பிக்கலாம் என்று மதர்
இம்மாகுலேட்டிடம் கேட்டார்?

1996

7. 1996-ம் ஆண்டு மதர் இமாகுலேட்டிடம் கன்னியர் மடம் ஆரம்பிக்கலாம் என்று
கேட்டவர்கள் யார்?

கிரேக்க கத்தோலிக்க மறைமுதுவர் மார்க்சிமூஸ் ஐந்தாம்
ஹக்கிம், சிறியாவின் டமாஸ்கசில்

8. கன்னியர் மடம் ஆரம்பிக்க எத்ததை கன்னியர்கள் வேண்டுமென்று கிரேக்க
மறைமுதுவர்கள் கேட்டனர்.

ஐந்து கன்னியர்கள்

9. தந்தை உழுநல்லூரின் குருத்துவ வெள்ளிவிழா நடைப்பெற்று கொண்டிருந்தபோது ஒரு
இந்து மதத்தை சார்ந்த சிறுமி தந்தையை பார்த்து என்ன கூறினார்?

"Good Morning Father”

10. இதை கண்ட ஆயர் தந்தை உழுநல்லூரிடம் கூறியது என்ன?

இதுவே மிகப் பெரிய வரவேற்பு என்றார்

11. தந்தை தோமஸ் குழிநாப்புரம் குருபட்டம் பெற்ற ஆண்டு?

1994 டிசம்பர் 26-ம் நாள்

12. தந்தை தோமஸ் குழிநாப்புரம் அவர்களுக்கு ஆயர் எங்கே சென்று மறைபரப்புபணி செய்யக் கட்டளை கொடுத்தார்

"ஆற்றிங்ஙல்"

13. ஆயர் லாரன்ஸ் ஆற்றிங்ஙல் கோயிலை பார்வையிட்ட ஆண்டு?

1997 ஆகஸ்ட் 5-ம் நாள்

14. ஆற்றிங்ஙல் ஆலயம் அர்ச்சிக்கப்பட்ட ஆண்டு?

1997 ஆகஸ்ட் 21-ம் நாள்

15. தந்தை சென்பகசேரி பணியாற்றி வந்த பங்கு?

ஊந்துகல்

16. ஊந்துகல் பங்கை சார்ந்த திரு. ஜோஸ் மாத்யு பச்சயில் என்பவர் யார்?

கேரளாவில் பெயர்பெற்ற ஒரு வழக்குரைஞர்

17. திரு. ஜோஸ் மாத்யு பச்சயில் அவர்களின் தந்தையின் நினைவு திருப்பலியில் ஆலய இடத்தின் ஓரம் சென்று கொண்டிருந்தவர்கள் யார்?

"குறவர் இனத்தை சார்ந்த சில ஏழை மனிதர்கள்"

18. குறவர் இனத்தை சார்ந்த சில ஏழை மனிதர்களிடம் உரையாடிவிட்டு முன்னர் பேசிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று ஆயர் என்ன கூறினார்?

ஏழைகளுக்கு உதவுவது நமது கடமை

19. மனநோயாளின் மகனுக்கு வீடு இல்லை என்று யார் யாரிடம் கூறினார்?

தந்தை எலியாஸ் அம்பாட்டு. ஆயரிடம்

20. மனநோயாளின் மகன் வசித்து வந்த இடம்?

வெஞ்ஞாறமூட்டில்

21. மந்தபுத்தியுடைய பிள்ளைகளின் பள்ளிக்கூடம் எங்கு உள்ளது

வட்டப்பபாறையில்

22. பொது நிலையினர் மிஷன் தளங்களில் சென்று உதவ வேண்டுமென்று ஆயர் அறிவுறுத்தினார் அதன் அடிப்படையில் இன்றும் மறைபரப்புபணியாற்றி வருபவாகள் யார்?

திரு. கே. மாத்யூ வர்கீஸ் சார்ட்டர்டு என்ஜினியரும்
அவரது மனைவி மேரி மாத்யூ

23. பின் தங்திய பங்குகளை வளர்ந்த பங்குகள் தத்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்?

ஆயர் லாரன்ஸ்

24. திரு. கே. மாத்யூ வர்கீஸ் சார்ட்டர்டு என்ஜினியரும் அவரது மனைவி மேரி மாத்யூ ஆகிய இருவரும் எந்த கூட்டத்தில் வைத்து "பொன் திபிக்கல் கவுன்சில் பார் பாமிலி - யின் இந்திய பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

பாப்பரசரின் அறிவுரை கூட்டத்தில்

25. திரு. கே. மாத்யூ வர்கீஸ் சார்ட்டர்டு என்ஜினியரும் அவரது மனைவி மேரி மாத்யூ ஆகிய இருவரும் பாப்பரசரின் அறிவுரை கூட்டத்தில் வைத்து எதன் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

பொன் திபிக்கல் கவுன்சில் பார் பாமிலி- யின் இந்திய பிரதிநிதிகளாக

26.Catholic Council of India என்ற கூட்டம் எங்கு வைத்து நடைப்பெற்றது?

எர்ணா குளத்தில்

27. Catholic Council of India என்ற கூட்டத்தில் திருமதி. மேரி மேத்யூ எந்த பொறுப்பில் செயல்பட்டார்?

"Sesesion Moderator"

28. சகோ. தோமஸ் ஆலுநில்குந்நதில் றீஜன்சி காலம் எங்கு வைத்து பணியாற்றினார்?

அரமனையில்

29. அருட். சகோதரி. பிரசாந்த டி.எம். சிவலோக மிஷனில் போய் சேர்ந்த ஆண்டு?

198-ம் ஆண்டு

30. சிவலோகத்தில் மீண்டும் வழிபாடு இடம் அமைக்க எதிர்ப்பு ஏற்பட்டது அப்போது ஒரு வீட்டில் வைத்து செபம் சொல்லப்பட்டது அப்போது அங்கு பங்கு தந்தையாக இருந்தவர் யார்?

தந்தை ஜாண் துண்டியத்

31. தந்தை டாணியேல் மாணிக்குளம் சிவலோகத்தில் பங்கு தந்தையாக பொறுப்பேற்ற ஆண்டு?

1991

32. பிற மத சகோதரர்கள் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை தரைமட்டமாக்கிய ஆண்டு?

1994 நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை

33. ஆயர் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகராய் இருந்த போது முதல் குருப்பட்டம் யாருக்கு கொடுத்தார்?

திரு.தொண்டர். வர்கீஸ் நடுதல

34. திரு.தொண்டர். வர்கீஸ் நடுதல குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட ஆண்டு?

1994-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் நாள்

35. திரு.தொண்டர். வர்கீஸ் நடுநல் எந்த இடத்தில் வைத்து குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்?

பின்குளம்

36. திரு.தொண்டர். வர்கீஸ் நடுநல் அவர்களின் குருபட்டத்தின் திருப்பலியின் போது எந்த பகுதியை நற்செய்தி பகுதியாக படித்தார்?

யோவான் 13: 31: 35

37. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நாளில் திருத்தந்தை ஒரு செய்தி கொடுப்பதுண்டு அது எந்த நாளாக கருதப்படுகிறது?

ஊலக அமைதி நாளாக

38. ஆன்மீக உயிர் என்று சொல்வது .............................................

இறையருள்

39. ஆயர் லாரன்ஸ் இறுதியாக குருபட்டம் கொடுத்தது யாருக்கு திருத்தொண்டர் ஸ்கரிய கொச்சு முருபேல்

40. ஆயர் லாரன்ஸ் எந்த கிறிஸ்தவ மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டுமென்று வாதாடினார்

தலித் கிறிஸ்தவர்கள்

41. தலித் கிறிஸ்தவ மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டுமென்று நடத்தப்பட்ட பேரணி எங்கிருந்து எங்கு வரை நடத்தப்பட்டது

திருவனந்தபுரம் வெள்ளயம்பாலத்திலிருந்து அரசு தலைமைச் செயலகம் வரை

42. ஆயர் தலித் கிறிஸ்தவர்களுக்கான பேரணியில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சேரி பகுதியை கண்டார் அங்கிருந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது?

HOM திட்டம்

43. ஆயர் லாரன்ஸ் எந்த இயக்கத்தில் சகோதரர் ஈடுபடவேண்டுமென்று அறிவுறுத்தினார்

"Friends of Trees"

 


16. பலரின் பார்வையில்....

1. நான் மார் எப்ரேம் ஆயரின் வாழ்க்கையை என் முன்மாதிரியாகக் கண்டு படிக்கவும், வளரவும் செய்தேன். அவரது பிரசன்னம் எனக்கு என்றும் புத்துணர்வையும், உள்ளுணர்வையும், அக ஒளியையும் கொடுத்திருக்கிறது என்று யார் கூறினார்?

         சாந்தி ஆசிரமத் தலைவர் தந்தை கிறிஸ் பின் ஆச்சாரியா

2. மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு தனிக் கவனம் செலுத்தும் நோக்குடன் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் யாரை திருவனந்தபுரம் அருகில் உள்ள முறிஞ்ஞபாலம் என்னும் இடத்திலுள்ள நிறுவனத்தில் பயிற்சிக்கு அனுப்பினார்?

          திருமதி. கனகபாய் சத்தியதாஸ், திருமதி. மேரி செல்லப்பா

3. ஆயரின் நேர்முக உதவியாளராக நீண்ட காலம் பணிபுரிந்தவர் யார்?

         திரு. வில்லியம்

4. 'ஆயர் அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. எந்த காரியத்தையும் முன் கூட்டியே கணித்து செயல்படுத்தும் திறமைவாய்ந்தவர். என்று கூறியவர் யார்?

         திரு. வில்லியம்

5. 'ஆயர் அவர்கள் பொதுவாக முன்னேற்றங்களில் மிகுந்த அக்கறை கொண்டவர்?

         சிறு குழந்தைகள் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம்

6. ''சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட, குரல் எழுப்ப முடியாத மக்களுக்காக தன் வாழ்வை நற்செய்தியின் மதிப்பீட்டிற்கு ஏற்ப அர்ப்பணித்தவர் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்கள். என்று கூறினார்?

          பத்தேரி மறைமாவட்ட ஆயர் மேதகு வற்கீஸ் மார் திவன்னியாசியோஸ்

7. எந்த இயேசுவின் வார்த்தையை ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் நம்பியிருந்தார்?

        ''மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் ......'' (மத். 25:40).

8. எது மார்த்தாண்டம் மறைமாவட்டத்தை தோற்றுவித்து அதைக்கட்டி எழுப்புவதற்குரிய திடனை ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் கொடுத்தது?

            இறைவனில் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான்

9. எந்த ஆண்டு நடந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைக் கூட்டத்தில் ஆயர் அடிக்கடி வந்து நேரடியாகவே அனைத்து ஏற்பாடுகளுக்கும் தலைமை ஏற்று வழிநடத்தினார்?

               1996 -ஆம்

10. 1997 -ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 5-ஆம் நாள் பத்தேரியில் வைத்து நடைபெற்ற எந்த ஆயர் அபிஷேகத்' திருச்சடங்கில் பேராயருடன் இணைந்து தலைமை வகித்தார்?

               ஆயர் மேதகு வற்கீஸ் மார் திவன்னியாசியோஸ்

11. ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் இறந்தபோது யார் ஆயரின் இறுதிச் சடங்குகளின் மத்தியில் தானாக இயற்றி மனமுருக பாடல் ஒன்றைப் பாடினார்?

               தந்தை நவமணி

12. ''உம்முகம் காண்பதெப்போ 20 உம்குரல் கேட்பதெப்போ - உம்மை ஆயர் இலாறன்ஸ் என்று அழைப்பதெப்போ .....'' என்று உணர்ந்து யார் கண்ணீர் வடிக்கப்பாடியது?

               தந்தை நவமணி

13. திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக தன்னையே வெறுமையாக்கிய பெருமையுடைய மனிதர் அவர். என்று யார் கூறியது?

              அருட் தந்தை தோமஸ் குளங்ஙர

 14. ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் C.B.C.I. யில் என்ன பொறுப்பில் இருந்தார்?

            பொதுச் செயலராக இருந்தார்.

15. ''ஒரு முறை உரோமில் வந்திருந்த ஆயர் கால்நடையாகவும், மற்றும் வாடகைக்காரிலும் பயணம் செய்த மிக எளிய வாழ்க்கை முறை என்னை அதிகமாகத் தொட்டது'' என்று யார் கூறியது?

           ஆயர் மேதகு தோமஸ் மார் கூறிலோஸ்

16. யார் தன்னை ஒரு போதும் அவர் உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ளவில்லை?

           ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்

17. குமரி கிறிஸ்தவ சமய மற்றும் சமூக நல்லிணக்க இயக்கத்தின் (KEM) செயலர் யார் ஆயருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களுள் ஒருவர்.

            அருட்திரு. சி. சாம்ஜி அவர்கள்?

18. எந்த ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த நல்லிணக்கத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்?

       2-ஆம் வத்திக்கான் சங்க

19. குமரி கிறிஸ்தவ சமய மற்றும் சமூக நல்லிணக்க இயக்கத்திற்கு யாராக இருந்து ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் இறுதிவரை பணி செய்தார்''?

              பாதுகாவலராக

20. "குமரி தென்னிந்திய திருச்சபையின் இரண்டாவது பேராயர் யாரை  போன்று ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் நடையில், அணுகுமுறையில், நிர்வாகத்தில், எளிமையானவராக செயல்பட்டார்?

              அறிவர் கொ. செல்வமணி அவர்களைப்

21. அகில இந்திய கத்தோலிக்க ஆயர் சங்கத்தின் பொதுச் செயலராக எத்தனை  முறை உயர்த்தப்பட்டார்?

          இரண்டு

22. ஆயருடன் நெருங்கிப் பழகி ஈடுபட்ட யார் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்களை ''காலத்துக்கு ஒவ்வாத ஆயர்'' என்று அழைக்கிறார்?

                 தந்தை பிரேம்குமார்

23. தந்தை பிரேம்குமார்  எடுத்துரைக்கும் மனிதனின் 3 வகைகள் யாவை?

          பழமைவாதிகள், புதுமை மனிதன், முற்போக்கு சிந்தனையாளன்

24. பழமைவாதி என்பவர்கள் யார்?

              சமூகத்தின் இன்றைய தேவைகளை 20 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூக சிந்தனைகளின் அடிப்படையில் சிந்திப்பான். அதையே சாதிக்க நினைப்பான்.

25.  'புதுமை மனிதன்' என்பவன் யார்?

                இன்றைய சமூக தேவைகளுக்கு, இன்றைய சிந்தனை அடிப்படையில் பதில் காண முயல்வான். அப்படியே செய்ய விரும்புவான்..

26. முற்போக்கு சிந்தனையாளன் யார்?

                  இனி 10 ஆண்டுகள் கழிந்தால் சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தனையோடு சமூகம் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது; இன்று எப்படி இருக்கிறது; 10 ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்க வேண்டும் என்று விஞ்ஞான முறைப்படி சிந்தித்து அதற்காக இன்று முற்படுவான்.

27. நம் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேன்மையான இலாறன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் எந்த நிலையில் உள்ளவர்?

               3-வது

28. ஆயர் முதன் முதலாக அவரது எந்த திட்டத்தின் சமூக அமைப்பிற்கு (Social Structure) பல ஆண்டுகளுக்கு முன் உருவம் கொடுத்தார்?

                                     HOM

29. எந்த ஒரு காரியத்தை ஆயரிடம் போய் சொன்னாலும், அதைக் என்ன செய்ய சொல்லுவார்கள்?

              காகிதத்தில் எழுதித்தரச்

.30. ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம் காலத்திற்கு ஒவ்வாத மனிதர். ஆனால் சமூகத்தின் வளர்ச்சிக்கு நாளைய தேவைகளையும், அணுகுமுறைகளையும் முன்காணும் யார் என்று தந்தை பிரேம்குமார் கூறுகிறார்?   

                 தீர்க்கதரிசி.

31. சகோதரர் பியோ அவர்கள் எந்த சபையைச் சேர்ந்தவர்?

             நாலாஞ்சிறை பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தவர்

32. எல்லோருக்கும் நான் இனி ஆயர். ஆனால் எந்த மக்களுக்கு நான் என்றைக்கும் ஃபாதராகவே இருப்பேன் என்றார் ஆயர் இலாறன்ஸ் மார் எப்ரேம்?

              கிளிமானூர்

33. சகோதரர் பியோ அவர்களுக்கு இலாறன்ஸ் ஆயர் யாராக இருந்தார்?

                  வழிகாட்டியாகவும், ஜெப வாழ்க்கையில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் மிஷன் வாழ்க்கைக்கு ஒரு திறமைசாலியாகவும், எளிய வாழ்க்கைக்கு சிறந்த உவமையாகவும்'' உண்மையாக திகழ்ந்தார்

  

17. மறைமாவட்ட உதயமும், ஆயரின் உறைதலும்       

1. 1996 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு பட்டம் புனித மரியன்னை பேராலயத்தில் பேராயர் சிறில் மார் பசேலியோஸ் எடுத்துரைத்த மூன்று மகிழ்ச்சியான செய்திகள் யாவை?

  1. பத்தேரி மறைமாவட்டத்தின் புது ஆயராக தந்தை வர்க்கீஸ் ஒற்றத்தெங்கில் 
  2. திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் தென்பகுதியை பிரித்து மார்த்தாண்டம் மறைமாவட்டம் உருவாக்குதல்
  3. புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் நியமிக்கப்படல்

2.யாருக்கு மோதிரமும், மாலையும், சிவப்பு இடைக்கச்சையும் அணிவிக்கப்பட்டன?

             தந்தை வர்க்கீஸ் ஒற்றதெங்கில்  

3. யாருக்கு இடைக்கச்சையும் மாலையும் அணிவிக்கப்பட்டது?

            ஆயர் லாரன்ஸ் மார் எஃப்ரேம்

4. பேராயரும் பிறரும் தங்கள் "அன்பையும், மகிழ்ச்சியையும் எவ்வாறு தெரிவித்தனர்?

            கட்டி அணைத்து, தழுவிக் கொண்டு.

5. பத்தேரி மறைமாவட்டத்தின் பரிபாலகராக இருந்தவர் யார்?

            மோண்சிஞ்ஞோர் தோமஸ் தாந்நிக்காகுழி,

6. எப்போது மார்த்தாண்டம் மறை மாவட்டம் உதயமான செய்தியும், அதன் முதல் ஆயராக மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் நியமிக்கப்பட்டதும்  பறைசாற்றப்பட்டது?

            1996 டிசம்பர் திங்கள் 16-ஆம் நாள்

7. எங்கு வைத்து மார்த்தாண்டம் மறைமாவட்டம் உதயமான செய்தியும், அதன் முதல் ஆயராக மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்கள் நியமிக்கப்பட்டதும் பறைசாற்றப்பட்டது?

             பட்டம் பேராலயத்தில்

 8. ஆயர் லாரன்ஸ் ஆயரோடு சிலகாலம் பணிபுரிந்த யார் ஆயரின் கைகளை முத்தம் செய்து கூறினார், ''பிதாவே! எங்கள் ஆவலை இறுதியில் இறைவன் சாதித்துத் தந்திருக்கிறார்?

               அருட். சகோதரி குசுமம் D.M

9. ஆயர் முதன் முறையாக மார்த்தாண்டம் வந்த போது எதை நினைவு கூர்ந்தார்?  

         தானியேல் சிங்கக்குகையில் 

10. ஆயர், இரண்டாம் முறை மார்த்தாண்டம் வந்தபோது எதை நினைவு கூர்ந்தார்?  

         இயேசு சிலுவை சுமந்து கொண்டு கல்வாரி நோக்கி பயணம்,

11. ஆயர் மூன்றாவதாக மார்த்தாண்டம் வந்தபோது எதை நினைவு கூர்ந்தார்?  

          (இரண்டு கைகளையும் விரித்து பிடித்துக்கொண்டு) சிலுவையில் மரணம்.

12. மேதகு ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம், மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக அறிவிக்கப்பட்டபின் முதன் முறையாக மறைமாவட்டத்தின் குருக்களை சந்தித்தபோது எடுத்துரைத்தது என்ன?

                       ''நான் இனி அதிக காலம் வாழ்ந்திருக்கமாட்டேன். என் இறப்புக்குப் பின் வெளியேயிருந்து யாராவது வந்து இங்குள்ள காரியங்களை செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தான் இங்குள்ள காரியங்களை கவனிக்க வேண்டியது'' என்று பொறுப்புக்களை உணர்ந்து நாம் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

13. ஜனவரி மாதம் எந்த தேதி மறைமாவட்ட தொடக்க விழாவும், பொறுப்பேற்பு விழாவும் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது?

              23-ஆம்

14. தொடக்க விழா எடுக்கும் இடம் எந்த இடம்  என்று தீர்மானிக்கப்பட்டது?

             மார்த்தாண்டம் மார்ஷல் நேசமணி நினைவுக் கல்லூரி மைதானம்

15. மறைவட்ட முதன்மைக் குருவுமான யார் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம்  ஆண்டைகைக்கு வழிபாட்டு முறைப்படி வரவேற்பு வழங்கினார்?

              தந்தை ஜோசப் பிலாங்காலை அவர்கள்

16. திருவனந்தபுரம் மறைமாநில குருகுல முதல்வர் யார் இலத்தீன் மொழியில் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயராக நியமித்திருக்கும் பாப்பரசர் ஆணையை வாசித்தார்?  

              கோர் எப்பிஸ் கோப்பா கோசி வர்க்கீஸ் அவர்கள்

17. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயராக நியமித்திருக்கும் பாப்பரசர் ஆணையத்தின் தமிழாக்கத்தை யார் வாசித்தார்?   

              தந்தை பிறேம்குமார்

18. திருப்பலியின் மத்தியில் யார் மறையுரை ஆற்றினார்?

              கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்கள்

19. எந்த தேதி வரை மறைமாநிலக்குருக்களுக்கு தங்கள் விருப்பப்படி புது மறைமாவட்டத்தில் பணியாற்றவோ, சேரவோ செய்வதற்குரிய முடிவெடுக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது?

              1997 ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை

20. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் யாரை V.G. ஆக நியமித்தார்?

              தந்தை மரிய அற்புதம்

 21. பிப்ரவரி மாதம் 19-ம் நாள் புதன்கிழமை. ஆயர் லாரன்ஸ் நோயின் ஆதிக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்?

              cosmopolitan

22. 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் நாள் ஆயர் லாரன்ஸ் எந்த பள்ளிக்கூட ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்?

               கிராத்தூர்

23. எந்த நாள் பத்தேரி மறைமாவட்டத்தின் புது ஆயராக மோண்சிஞ்ஞோர் வர்க்கீஸ் ஒற்றத் தெங்கில் அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டார்?

                1997 பிப்ரவரி 5-ஆம் நாள்

24.  ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் இறுதியாக ஆசீர்வதித்த திருமணம் யாருடைய திருமணம்?

                 அவரது ஓட்டுநர், திரு. லாசரின் மகளின் திருமணம்.

25. ஆரம்பம் முதல் இறுதிவரை மருத்துவர், மருத்துவமனை சம்பந்தமான அனைத்து காரியங்களிலும் மிகவும் உதவியவர் அருட் தந்தை யார்?

                  அருட் தந்தை ஜோசி (தந்தை ஜார்ஜ் ஜோண்).

26. ஆயரின் பாலர் பருவத்தில் சகோதரர் எப்ரேம்' கற்றுக்கொடுத்தத பாடல் எது?

                         ''நன்ம நிறஞ்ஞோரம்மே

தின்மையில் நிந்நு செம்மே

காத்து இரட்சிச்சீடணே

கனிவுள்ள கன்னி அம்மே!''

27. மருத்துவமனையில் படுத்து, தளர்ந்து, மனம் சோர்ந்து இருந்த ஆயர் 21-2-97ல் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டபோது எங்கு சென்று செபித்தார்?  

                மார் இவானியோஸ், மார் கிரிகோரியோஸ் ஆகியோரின் கல்லறையில் செபித்தார்.

28. எந்த கூட்டம்தான் ஆயர், குருக்களின் குழுவுடன் நடத்தும் இறுதிக் கூட்டம்?

             27-2-1997 வியாழக்கிழமை அன்று எல்லா தந்தையரும் குழித்துறைக்கு அழைக்கப்பட்ட கூட்டம்.

29. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் எப்போது மரணமடைந்தார்?  

               1997 ஏப்ரல் மாதம் 8-ம் தேதி செவ்வாய்கிழமை! அதிகாலை 12.40 மணிக்கு

30. எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேதகு ஆயர் அவர்கள் 8-4-1997 அதிகாலை 12.40 மணியளவில் இம்மண்ணகம் விட்டு விண்ணகம் சேர்ந்தார்?

               திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா

31. எப்போது  இறுதிச் சடங்குகள் ஆரம்பமானது?

                9-4-97 அன்று காலை 11 மணிக்கு

32 இறுதிச் திருச்சடங்கின் மத்தியில் யார் மலையாள மொழியில் மறையுரை ஆற்றினார்?

           திருவனந்தபுரம் மறைமாவட்ட ஆயர் சூசைபாக்கியம்

33. இறுதிச் திருச்சடங்கின் மத்தியில் யார் தமிழ்மொழியில் மறையுரை ஆற்றினார்?

கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்கள்

34. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்கள் மறையுரையின் போது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறும் எந்த வார்த்தைகளை என் நினைவுகூர்ந்தார்?

நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை.

தமக்கென்று இறப்பதுமில்லை - நாம் வாழ்ந்தாலும்

ஆண்டவருக்கென்றே வாழ்கின்றோம். இறந்தாலும்

ஆண்டவருக்கென்றே இறக்கின்றோம். வாழ்ந்தாலும்

இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்கள்''

35. கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்த ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அதே நிலையில் இயேசுவின் திருச்சிலுவை முன்பு எத்தனை தடவை தூக்கி உயர்த்தப்பட்டு திருச்சடங்குகள் நடத்தப்படுகின்றன?

           மூன்று

36. இயேசுவின் எந்த இறைவார்த்தைகளுக்கு ஏற்ப ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களும் மிகுந்த பலன் கொடுப்பதற்காக தன்னை மடியச் செய்திருக்கிறார்கள்?

           "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்'' (யோவான் 12:24).

37. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு மாதிரி மட்டுமல்ல மாறாக அவர் அன்பு செய்த நம் அனைவருக்கும் எதுவாக திகழ்கின்றது?

            இறையருள் பெறும் ஒரு இனிய அருவியாகவும்

 38. ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களின் இறப்பு இறைவன் இன்று நமக்கு விடுக்கும் ஓர் அழைப்பு! என்ன?

              அர்ப்பண வாழ்வு வாழ விடுக்கும் அழைப்பு!

 

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை