Posts

Showing posts from October, 2024

மார்த்தாண்டத்தை உயர்த்தியவர் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்

  மார்த்தாண்டத்தை உயர்த்தியவர் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் 1998 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக மேதகு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் அறிவிக்கப்பட்ட போது மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. ஏனென்றால் முதலாம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பட்டம் என்னுமிடத்தில் அமைந்திருந்த அருட்பணித்துவ பயிற்சியகத்தில் முதலாமாண்டு கற்கின்ற போது காலை நேரங்களில் தியானப் பயிற்சிகள் பல நிகழ்த்தி ஆன்மீக   வளர்ச்சிக்கு வித்திட்ட மிகப்பெரிய மாமேதையாய் அவரை அறிந்திருந்தேன். என்னை குருவாக அருட்பொழிவு செய்தவரும் இவரே. நீண்ட ஏழு ஆண்டுகள் ஆயரின் செயலராகவும், மறைமாவட்ட பொருளராகவும் இணைந்து பணிபுரிய இறைவன் அளித்த பெரும் பேற்றை எண்ணி மகிழ்கிறேன். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நம் ஆயர் அவர்கள் கொண்டிருந்த நற்பண்புகள் ஏராளம். ஏராளம். ஏராளம். அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டுமே நான் இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன். 1.         இறை வேண்டுதலில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். மாலை உணவு முடிந்த பின்னர் நேராக...

10.10.2024 இன்றைய இறைவார்த்தை

Image
  தொடக்க நூல் 23, 24 அதிகாரம் 23 1 சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே. 2 கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார். 3 பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது; 4 ";நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்" என்று கேட்டார். 5 இத்தியர் ஆபிரகாமுக்கு மறுமொழியாக; 6 எம் தலைவரே! கேளும். நீர் எங்களிடையே ஒரு வலிமைமிக்க தலைவராய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் சிறந்த ஒன்றில் உமது வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்யலாம். உம் வீட்டில் இறந்தாரைத் தன் கல்லறையில் நீர் அடக்கம் செய்ய எங்களுள் எவனும் மறுக்க மாட்டான்" என்றனர். 7 அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டு மக்களாகிய இத்தியர் முன் தாழ்ந்து வணங்கி, 8 அவர்களை நோக்கி, "என் வீட்டில் இறந்தாரை நல்லடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால், நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் சோகாரின் மகனான எ...

மறக்க மறுக்கும் மாமனிதன் மார் கிரிகோரியோஸ்

Image
மறக்க மறுக்கும் மாமனிதன் மார் கிரிகோரியோஸ்   மலங்கரை கத்தோலிக்க திருச்சபை மற்றும் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தின் இரண்டாவது பேராயரான  பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் இறந்து விண்வாழ்வில் 25 ஆண்டுகளை தாண்டினாலும்  மனித மனங்களில் நினைவில் வாழும் வாழ்கின்ற ஒரு பேராயராக நம்மால் அவரை இன்றும் உணர முடிகிறது. அன்று தனது தொலைநோக்குப் பார்வையோடு உரைத்த மறையுரைகள் இன்றும் போற்றப்படுபவையாக உள்ளன. மத இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களோடும் திருச்சபையின் மேன்மையை வாழ்ந்து சாட்சியமாக எடுத்துக்காட்டி வந்தார். பெனடிக்ட் என்ற சொல்லுக்கு “ஆசீர்வதிக்கப்பட்டவன்” மற்றும் “இறைவனின் அருளை பெற்றுக் கொண்டவன்” என்ற அர்த்தங்கள உள்ளன. மார் என்ற சுறியானிச் சொல்லானது மதிப்புக்குரியவர், புனிதர் மற்றும் இறைத்தன்மை கொண்டவர் என்ற அர்த்தங்களை குறிக்கக்கூடிய சொல்லாகும். கிரிகோரியோஸ் என்ற சொல்லின் அர்த்தம் “விழிப்பாய் இருங்கள்” என்பதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு கூறிய மற்றும் அவர்கள் செய்வதற்கு பணித்த சொல்தான் இச்சொல். பேராயர் அவர்கள் , திருச்சபையின் அன்புக்குரியவராகவும் திருச்சபை யில்  ஒளி ...