Posts

Showing posts from December, 2024

அந்தியோக்கியர்களால் பிளவுற்ற மலங்கரை திருச்சபை

 அந்தியோக்கியர்களால் பிளவுற்ற மலங்கரை திருச்சபை இந்தியாவில் கேரளாவுக்கு எப்போதெல்லாம் மறைமுதுவர்கள் வருகை புரிந்தனரோ அப்போதெல்லாம் ஒரு புதிய திருச்சபை பிரிவு உருவானதாக மலங்கரை திருச்சபை வரலாறு எடுத்துக் கூறுகின்றது. 1665ல் வந்த மார் கிரிகோரியோஸ் மறைமுதுவர் 16 நூற்றாண்டுகளாக உரோமையில் திருத்தந்தையின் திருஆட்சியின் கீழே இருந்த கேரளா கிறிஸ்தவ மக்களிடையே பிரிவினைகளின் விதைகளை விதைக்கச் செய்து அவர்களை யாக்கோபியர்களாக மாற்றினார். 1751ல் அந்தியோக்கியாவிலிருந்து வந்த மார் கிரிகோரியோஸ் காட்டுமங்காட்டு ரம்பான் என்பவரை மார் கூரிலோஸ் என்ற பெயரில் ஆயராக அருள்பொழிவு செய்யவும் அதன் மூலம் “தொழியூர் அல்லது அஞ்ஞூர் திருச்சபை” என்ற ஒரு புதிய திருச்சபை சமூகம் உருவாகவும் காரணமானார். 1875 ல் மலங்கரையின் மார் அத்தனாசியோஸ் ஆயரை தடை செய்ததன் மூலம் மறுமலர்ச்சிக் குழுவினர் என்ற பெயரில் “மார் தோமா திருச்சபை” உருவானது. 1910 இல் இங்கு வந்த அப்துல்லா மறைமுதுவர் வட்டசேரில் ஆயரை தடை செய்யவும் அவ்வாறு ஆயர் குழுவினர் அல்லது “ஆர்த்தடோக்ஸ் திருச்சபை” என்ற பிரிவினை உருவாகவும் காரணமானார். 1932 ல் வந்த எலியாஸ் ...

தேவ நற்கருணையின் பெனடிக்டீனியர்கள் பகுதி 1

Image
  தேவ நற்கருணையின் பெனடிக்டீனியர்கள்   பகுதி 1   1.         சாந்தி ஆசிரமத்தின் தடங்கள்   மலங்கரை கத்தோலிக்க திருஅவையின் மார்த்தாண்டம் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவிலை அடுத்த முக்கடல் எனும் இடத்தில் சாந்தி ஆசிரமம் நிலைத்திருக்கின்றது.   மேற்குத் தொடர்ச்சி மலையின் மூன்று மலைகளான குடமுருட்டி மலை, வரட்டு மலை மற்றும் வேளி மலை ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவே நாஞ்சில் நகருக்கு நீராதாரமான அணை அமைக்கப்பட்டது. மூன்று மலைகளின் கூடலாக காட்சியளித்தமையால் இதற்கு முக்கூடல் அணை எனப் பெயர் வழங்கப்பட்டது. நாளடைவில் முக்கூடல் என்னும் சொல் மருவி முக்கடல் என்னும் பெயரைக் கொண்டது. 1987 ஆம் ஆண்டிலேயே முக்கடல் மலைச்சாரலில் எளிமையான ஒரு ஆசிரமமாக சாந்தி ஆசிரமம் கிறிஸ்பின் ஆச்சாரியா அவர்களால் துவங்கப்பட்டது. மத்தேயு 25 ; 40 என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப வாகமண் குருசுமலை ஆசிரமத்தில் இருந்து முக்கடல் நோக்கி அருட்சகோதரர் கிறிஸ்பின் அவர்கள் தனது பயணத்தை மேற்கொண்டு பணித்தளத்தை ஆரம்பித்தார். பூதப்பாண்டியில் வாடகை வீடு ஒன்றில் தனது பணிகளை ஆரம்பித்தா...

1930 க்கு முந்தைய மறுஒன்றிப்பு முயற்சிகள்

  1930 க்கு முன்னர் புதிய கூற்றினரின்  ஒன்றிப்பு முயற்சிகள்ளும்              ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய உவமைகளில் மிகவும் முக்கியமான உவமை காணாமல் போன மகன் திரும்பி வரும் ஊதாரி மகனின் உவமை ஆகும். சீக்கிரமாக தனது மனதில் உருவான எண்ணங்களால் இளைய மகன் தனது சொந்த வீட்டையும் உறவினர்களையும் விட்டுவிட்டு தொலைதூரத்திற்கு பயணம் புறப்பட்டான். தனது கையில் இருந்த தொகை அனைத்தும் முடிந்த பின்னர் உணவு உண்ண வழி இன்றி அவன் அலைகின்றான். அவனுக்கு அப்போது தான் அறிவு உருவாகின்றது. தனது சொந்த தந்தையின் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற முடிவு. இக்காலம் அனைத்தும் தனது மகனின் திரும்ப வருதலுக்காக வருத்தத்தோடு ஜெபிக்கவும் நம்பிக்கையோடு காத்திருக்கவும் செய்த அந்த தந்தை மகனின் வருகையைக் கண்டவுடன் மகிழ்ந்தார். அவ்வாறு அந்த குடும்பம் முழு அமைதியும் ஆனந்தமும் பெற்றுக்கொள்கின்றது. கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு காரணங்களால் பிரிந்து போன ஒவ்வொருவரையும் திரும்பி வருமாறு அல்லது மறுஒன்றிப்புக்காக ஊதாரி மைந்தனைப் போன்று ...