சிலுவைப்பாதை மலங்கரை இசையில்
சிலுவைப்பாதை மலங்கரை இசையில்
|
பீடத்தின்
முன் ஆண்டவரே அருள் செய்தருளும் உம் திருப்பாடின் பா-தையிலே எங்கள் வாழ்வின் துயர்களையும் தாங்கிடும் வரமருளெங்-கட்-காய்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் சிலுவை வழியே மானிடரும் மீட்பைத் தம்பால் கொண்டனரே வாழ்வின் முன்னே உமைக்கண்டு உன்னடி தொடர வர - மருளும்.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீரன்பால் |
|
முதல்
நிலை தீர்ப்பிடாதே நீ -யென மொழிந்தார் தீர்ப்பைத் தன்பால் கொண்டாரே மானிடர் பாவம் தமக்காக குற்றம் செய்தோரா - கினீரே.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் பாவத் - தின் சம்பளம் சாவை பாவ - மற்றோன் தானேற்றார் துன்பங்கள் தன் மத்தியிலே இன்பம் காண அருள்புரியும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
இரண்டாம்
நிலை பாரச்- சிலுவை தனைப் பாரீர் இயேசுவின் வேதனை தனைப் பாரீர் அவரின் தியாகம் தனைப் பாரீர் நன்மையின் முகத்தைப் பாரீரே
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் உம்மைப் போன்றே நாங்களும் சிலுவை ஏற்க வரமருளும் இடர்வரின் சோர்வு கொள்ளாமல் மகிழ்வாய் ஏற்க வரமருளும்.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
மூன்றாம் நிலை சிலுவையோடுனது முதல் வீழ்ச்சி மண்ணுக்களித்த முதல் முத்தம் வாழ்வின் இடறலால் வீழ்ந்திடினும் அரவணைப்போடு காத்தருளும்
இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் எம்பாவங்கள் உமை வீழ்த்த நாங்களும் வெட்கித் தலை தாழ்த்த தோல்விகள் தினமும் நமை வீழ்த்த அவர் கரம் வருமே பிடித் - துயர்த்த
இறைவாகனிந்தருள்வீ-ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
நான்காம்
நிலை மரியா தன்மக - னருகேகி உள்ளம் நொந்து அழுதாளே ஆறுதல் மொழியும் மனத்தோடாய் விழிகள் நான்கும் சந்தித்தன
இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் ஒடுக்கப் - பட்டோர் உரிமைக்காய் போய் வா மகனே வென்றிடுவாய் தன்னா - சீரை விழிவழியாய் கண்ணீ- ரொழுக அழுதாளே
இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
ஐந்தாம்
நிலை சீரேனே ஊரான் சீமோன் தோள் கொடுக்கும் தோழனானார் மானிடர் தீமை -கள் அழுத்த சீமோன் நன்மை தாங்கியதே
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் கண் கால் கை - கள் என்றிருந்தும் குருடர் ஊனர் முடவர்களாய் செயலற்-றிருக்கும் தீயோர்க்கு நன்மை செய்யும் வரமருளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
ஆறாம்
நிலை முகத்தை பதித்தீர் துணிதனிலே வேரோ - ணிக்காள் உதவிடவே உதவிடும் மாதை குணமதனை தாரும் எமக்கும் எந்நாளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் பங்கம் என்று இகழ்வாரோ பாவி எனக்கல் - லெறிவாரோ எப்படி - யவரை உதவிடுவேன் வீரப்பெண்- ணாய் முகம் துடைத்தாள்
இறைவா கனிந்தருள்வீ'. ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
ஏழாம் நிலை சிலுவையின் பாரம் உடலழுத்த கற்கள் பாதங்களைத் துளைக்க உடலின் பலமும் வலுவிழக்க இரண்டாம் முறையும் வீழ்கின்றார்
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் இயேசுவி - னுடலும் சோர்ந்திடவே சிலுவையின் பாரம் வீழ்த்திடவே தீண்டி -யோரை பொறுக்கின்றார் தானா -யெழும்பிட முயல்கின்றார்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
எட்டாம்
நிலை அழுது புலம்பும் மாதையரோ வருந்தி ஓலமிட் -டழுதனரே எம்மால் இப்படி ஆகினதோ அறியாமல்லழுகின் - றனரே
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் உம் பிள்ளைக்காய் அழுதிடுவீர் உங்களுக்கா - கவுமழுதிடுவீர் பச்சைமரமிதன் நிலை காணீர் பட்டமரத்தை நினைத்துப் பாரீர்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
ஒன்பதாம்
நிலை அலகையின் சோதனை மூன்றுமுறை இயேசுவின் வீழ்ச்சியும் மூன்றுமுறை எதையும் தாங்கும் இதயத்தால் துயரால் வெற்றி - யடைகின்றார்.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் தொட்டில் முதல் கல்-லறை வரையும் ஏக்கத்தோடு அழுகின்றான். உம்மைப் போன்றே மானிடர்க்கும் தாங்கிடும் வரம்தனை எமக் - கருளும்
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
பத்தாம்
நிலை குருதியில் ஒட்டிய ஆடையினை வலியால் துடிக்க அகற்றினரே இரத்தம் வழியும் காயங்களால் யாவையும் இழந்து நின்றாரே
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ"- ரன்பால் உடைகள் உரிந்திட உமைத் தந்தீர் உம்மையே வெறுமை ஆக்கினீர் அவமானத் -தோடு தலைகுனிந்தீர் பெருமையினாலே எமைமீட்டீர்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
பதினொன்றாம் நிலை இரு கைகளும் ஈராணியதால் இரு கால்களும் ஓராணியதால் கழுமரம் என்ற சிலுவையிலே அறையப்பட்டார் என்னிறைவன்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீரன்பால் வாழ்வின் பல தீமைகளாலே ஆணிகளாலின் றறைகின்றோம் வரமருளிறைவா வரமருளும் திருந்திட எமக்கு வருமருளும்
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
பன்னிரண்டாம்
நிலை நாற்றிசையுலகின் நல்லவனோ என்னிறைவா என்னிறைவா ஏனென்னை நீர் கைவிட்டீர் என்றே கூவி உயிர் துறந்தார்.
இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் எமக்காய் நல்லுயிர் ஈந்தவரே. எமக்காய் தன்னையே தந்தவரே எமக்காய் சிலுவையில் இறந்தவரே உமக்காய் எங்களை தந்திடுவோம்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
பதிமூன்றாம்
நிலை மழலையாய் மடியில் கிடத்தியவர் மகவாய் அன்புடன் வளர்த்தியவர் அவனியின் மீட்பாய் வந்தவரை உடலாய் மடியில் கிடத்துகிறார்.
இறைவா கனிந்தருள்வீ". ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் துயருடன் துடித்தாள் அன்னை மரி உற்றுப் பார்த்தாள் கண்ணீரோடு – வியாகுல அன்னை மடி துயிலும் விண்ணவரே எமைக் காத்தருளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
பதினான்காம்
நிலை ஒளியின் இறையாய் வந்தவர் இருளின் கல்லறை செல்கின்றார் இருளை வென்று ஒளி கொண்டு உயிருடன் உம் வருகை என்றோ?
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் நிறைவின் இருப்பிடமே இறைவா கல்லறையுள்ளே உமைக் கொண்டிர் இருளை வென்று ஒளி கொண்டு உயிருடன் உம் வருகை என்றோ
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
|
பீடத்தின்
முன் வாழ்வைத் தந்தீர் உம திறப்பால் நாங்கள் பெற்றோம் புது வாழ்வை கல்லறையுள்ளில் துயின்றவரே இறந்தோர்க்கருளிடுவீர் அருளை
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் தந்தையாம் இறைவா நீர் போற்றி மகனாம் இறைவா நீர் போற்றி ஆவியாம் இறைவா நீர் போற்றி மூவோரிறைவனாம் நீர் போற்றி
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால் |
பாடல்களின்
இசையைக் கேட்க தொடர்புக்கு
https://youtu.be/M0zpuhb3PDQ
Comments
Post a Comment