சிலுவைப்பாதை மலங்கரை இசையில்

 சிலுவைப்பாதை மலங்கரை இசையில்

பீடத்தின் முன்

ஆண்டவரே அருள் செய்தருளும்

உம் திருப்பாடின் பா-தையிலே

எங்கள் வாழ்வின் துயர்களையும்

தாங்கிடும் வரமருளெங்-கட்-காய்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

சிலுவை வழியே மானிடரும்

மீட்பைத் தம்பால் கொண்டனரே

வாழ்வின் முன்னே உமைக்கண்டு

உன்னடி தொடர வர - மருளும்.

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீரன்பால்

முதல் நிலை

தீர்ப்பிடாதே நீ -யென மொழிந்தார்

தீர்ப்பைத் தன்பால் கொண்டாரே

மானிடர் பாவம் தமக்காக

குற்றம் செய்தோரா - கினீரே.

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பாவத் - தின் சம்பளம் சாவை

பாவ - மற்றோன் தானேற்றார்

துன்பங்கள் தன் மத்தியிலே

இன்பம் காண அருள்புரியும்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

இரண்டாம் நிலை

பாரச்- சிலுவை தனைப் பாரீர்

இயேசுவின் வேதனை தனைப் பாரீர்

அவரின் தியாகம் தனைப் பாரீர்

நன்மையின் முகத்தைப் பாரீரே

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

உம்மைப் போன்றே நாங்களும்

சிலுவை ஏற்க வரமருளும்

இடர்வரின் சோர்வு கொள்ளாமல்

மகிழ்வாய் ஏற்க வரமருளும்.

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

மூன்றாம் நிலை

சிலுவையோடுனது முதல் வீழ்ச்சி

மண்ணுக்களித்த முதல் முத்தம்

வாழ்வின் இடறலால் வீழ்ந்திடினும்

அரவணைப்போடு காத்தருளும்

    இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

எம்பாவங்கள் உமை வீழ்த்த

நாங்களும் வெட்கித் தலை தாழ்த்த

தோல்விகள் தினமும் நமை வீழ்த்த

அவர் கரம் வருமே பிடித் - துயர்த்த

    இறைவாகனிந்தருள்வீ-ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

 

நான்காம் நிலை

மரியா தன்மக - னருகேகி

உள்ளம் நொந்து அழுதாளே

ஆறுதல் மொழியும் மனத்தோடாய்

விழிகள் நான்கும் சந்தித்தன

    இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

ஒடுக்கப் - பட்டோர் உரிமைக்காய்

போய் வா மகனே வென்றிடுவாய்

தன்னா - சீரை விழிவழியாய்

கண்ணீ- ரொழுக அழுதாளே

    இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

ஐந்தாம் நிலை

சீரேனே ஊரான் சீமோன்

தோள் கொடுக்கும் தோழனானார்

மானிடர் தீமை -கள் அழுத்த

சீமோன் நன்மை தாங்கியதே

    இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

கண் கால் கை - கள் என்றிருந்தும்

குருடர் ஊனர் முடவர்களாய்

செயலற்-றிருக்கும் தீயோர்க்கு

நன்மை செய்யும் வரமருளும்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

ஆறாம் நிலை

முகத்தை பதித்தீர் துணிதனிலே

வேரோ - ணிக்காள் உதவிடவே

உதவிடும் மாதை குணமதனை

தாரும் எமக்கும் எந்நாளும்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பங்கம் என்று இகழ்வாரோ

பாவி எனக்கல் - லெறிவாரோ

எப்படி - யவரை உதவிடுவேன்

வீரப்பெண்- ணாய் முகம் துடைத்தாள்

    இறைவா கனிந்தருள்வீ'. ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

ஏழாம் நிலை

சிலுவையின் பாரம் உடலழுத்த

கற்கள் பாதங்களைத் துளைக்க

உடலின் பலமும் வலுவிழக்க

இரண்டாம் முறையும் வீழ்கின்றார்

    இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

இயேசுவி - னுடலும் சோர்ந்திடவே

சிலுவையின் பாரம் வீழ்த்திடவே

தீண்டி -யோரை பொறுக்கின்றார்

தானா -யெழும்பிட முயல்கின்றார்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

 

எட்டாம் நிலை

அழுது புலம்பும் மாதையரோ

வருந்தி ஓலமிட் -டழுதனரே

எம்மால் இப்படி ஆகினதோ

அறியாமல்லழுகின் - றனரே

    இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

உம் பிள்ளைக்காய் அழுதிடுவீர்

உங்களுக்கா - கவுமழுதிடுவீர்

பச்சைமரமிதன் நிலை காணீர்

பட்டமரத்தை நினைத்துப் பாரீர்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

ஒன்பதாம் நிலை

அலகையின் சோதனை மூன்றுமுறை

இயேசுவின் வீழ்ச்சியும் மூன்றுமுறை

எதையும் தாங்கும் இதயத்தால்

துயரால் வெற்றி - யடைகின்றார்.

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

தொட்டில் முதல் கல்-லறை வரையும்

ஏக்கத்தோடு அழுகின்றான்.

உம்மைப் போன்றே மானிடர்க்கும்

தாங்கிடும் வரம்தனை எமக் - கருளும்

    இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பத்தாம் நிலை

குருதியில் ஒட்டிய ஆடையினை

வலியால் துடிக்க அகற்றினரே

இரத்தம் வழியும் காயங்களால்

யாவையும் இழந்து நின்றாரே

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ"- ரன்பால்

உடைகள் உரிந்திட உமைத் தந்தீர்

உம்மையே வெறுமை ஆக்கினீர்

அவமானத் -தோடு தலைகுனிந்தீர்

பெருமையினாலே எமைமீட்டீர்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பதினொன்றாம் நிலை

இரு கைகளும் ஈராணியதால்

இரு கால்களும் ஓராணியதால்

கழுமரம் என்ற சிலுவையிலே

அறையப்பட்டார் என்னிறைவன்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீரன்பால்

வாழ்வின் பல தீமைகளாலே

ஆணிகளாலின் றறைகின்றோம்

வரமருளிறைவா வரமருளும்

திருந்திட எமக்கு வருமருளும்

    இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

 

பன்னிரண்டாம் நிலை

நாற்றிசையுலகின் நல்லவனோ

என்னிறைவா என்னிறைவா

ஏனென்னை நீர் கைவிட்டீர்

என்றே கூவி உயிர் துறந்தார்.

    இறைவா கனிந்தருள்வீ-ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

எமக்காய் நல்லுயிர் ஈந்தவரே.

எமக்காய் தன்னையே தந்தவரே

எமக்காய் சிலுவையில் இறந்தவரே

உமக்காய் எங்களை தந்திடுவோம்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பதிமூன்றாம் நிலை

மழலையாய் மடியில் கிடத்தியவர்

மகவாய் அன்புடன் வளர்த்தியவர்

அவனியின் மீட்பாய் வந்தவரை

உடலாய் மடியில் கிடத்துகிறார்.

    இறைவா கனிந்தருள்வீ". ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

துயருடன் துடித்தாள் அன்னை மரி

உற்றுப் பார்த்தாள் கண்ணீரோடு –

வியாகுல அன்னை மடி துயிலும்

விண்ணவரே எமைக் காத்தருளும்

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பதினான்காம் நிலை

ஒளியின் இறையாய் வந்தவர்

இருளின் கல்லறை செல்கின்றார்

இருளை வென்று ஒளி கொண்டு

உயிருடன் உம் வருகை என்றோ?

    இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

நிறைவின் இருப்பிடமே இறைவா

கல்லறையுள்ளே உமைக் கொண்டிர்

இருளை வென்று ஒளி கொண்டு

உயிருடன் உம் வருகை என்றோ

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

பீடத்தின் முன்

வாழ்வைத் தந்தீர் உம திறப்பால்

நாங்கள் பெற்றோம் புது வாழ்வை

கல்லறையுள்ளில் துயின்றவரே

இறந்தோர்க்கருளிடுவீர் அருளை

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்

தந்தையாம் இறைவா நீர் போற்றி

மகனாம் இறைவா நீர் போற்றி

ஆவியாம் இறைவா நீர் போற்றி

மூவோரிறைவனாம் நீர் போற்றி

    இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்

    நாதா தயை செய்வீ- ரன்பால்


பாடல்களின் இசையைக் கேட்க தொடர்புக்கு

https://youtu.be/M0zpuhb3PDQ

 

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை