நித்திய ஸ்துதிக்குரிய 10 முறை பாட

 

நற்கருணை முன் ஆராதனைப்பாடல்

 

நித்திய ஸ்துதிக்குரிய

பரிசுத்த நற்கருணைக்கே

பக்தியாய் ஆராதனை

எத்திசையும் புரிவோம்

1

உமது உடனிருப்பை

அப்பத்துக்குள்ளே கொண்டு

எப்போதும் காப்பவரே

உம் பாதம் பணிகின்றோம்

2

உறவுக்கு எடுத்துக்காட்டாய்

என்னுள்ளே வாழ்பவரே

அன்பென்னும் அமுதமே

உன் பாதம் பணிகின்றோம்

3

இன்பத்தால் மகிழ்விப்பாய்

துன்பத்தில் தேற்றிடுவாய்

என்றென்றும் அரவணைப்பாய்

உம் பாதம் பணிகின்றோம்

4

உள்ளத்தில் வந்திடுவாய்

எண்ணத்தில் வந்திடுவாய்

மொத்தமாய் தந்திடுவேன்

உம் பாதம் பணிகின்றோம்

5

அப்பத்தின் வடிவத்தில்

பேழையில் வீற்றிருக்கும்

தலைவா தலைவணங்கி

உம் பாதம் பணிகின்றோம்

6

கருணையின் வடிவான

நற்கருணை நாதரே

கருணைக்கண் காட்டிடுவாய்

உம் பாதம் பணிகின்றோம்

7

அன்பென்னும் பாத்திரமே

அன்பில்லா எங்களுக்கு

அன்பினை தந்திடவே

உம் பாதம் பணிகின்றோம்

8

பாவத்தால் வெட்கிப்போன

உம்மாந்தர் உம் திருமுன்

உள்ளத்தால் அழுகின்றோம்

உம் பாதம் பணிகின்றோம்

9

விண்ணகத்தலைவரே

மண்ணக மண்ணோர்களை

அருள் அருளி மீட்டிடுவாய்

உம் பாதம் பணிகின்றோம்

10

நற்கருணை நாதரே

பாவிகள் எங்களையே

உம்மருளால் காத்தருள

உம் பாதம் பணிகின்றோம்

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை