Posts

Showing posts from September, 2024

முதல் மறுஒன்றிப்பு ஆண்டு விழாவில் பேராயர் மார் இவானியோஸ் அவர்கள் வழங்கிய உரை. The Lamp (1931 December) என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டதன் மொழிபெயர்ப்பு

  1931 செப்டம்பர் 28ஆம் தேதி திருவல்லா திருமூலபுரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த மறுஒன்றிப்பு ஆண்டு விழாவில் பேராயர் மார் இவானியோஸ் அவர்கள் வழங்கிய உரை. ( The Lamp ( 1931 December ) என்னும் மாத இதழில் வெளியிடப்பட்டதன் மொழிபெயர்ப்பு அன்புக்குரிய மேதகு பேராயர்களே, சகோதர ஆயர்களே, குருக்களே, துறவியர்களே, சகோதர சகோதரிகளே, எபேசு திருச்சங்கத்தின் 1500 ஆம் ஆண்டு விழாவும் மறுஒன்றிப்பின் முதல் ஆண்டு விழாவும் இணைந்து ஆடம்பரமாக கொண்டாடும் இவ்வேளையில் விசுவாச சமூகத்தோடு கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான ஆயர்களோடும் குருக்களோடும் இணைந்து பங்கு கொள்ளும் இத்தருணம் மிகவும் உன்னதமான சந்தர்ப்பம் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. எபேசு திருச்சங்கத்தில் உயர்த்தி காட்டப்பட்ட நம்பிக்கை அறிக்கையே எளியவனாகிய என்னை கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வைத்தது. இவ்விரு நிகழ்வுகளும் இணைத்து கொண்டாடுவதன் நோக்கமும் இதுவே தான். எபேசு திருச்சங்கம் வெளியிட்ட நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையின் ஒரு மைல்கல்லாகவே இருந்தது எனக் கூறலாம். திருச்சபையில் புனித கன்னி மரியாவின் முக்கியமான நிலையை அங்கீ...

திரு. சாக்கோ கிளீலேத்து (நினைவு தினம் செப்டம்பர் 17)

Image
ம லங்கரை கத்தோலிக்க திருஅவையை கட்டி எழுப்ப வணக்கத்துக்குரிய பேராயர் மார் இவானியோஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றிய பொதுநிலையினருள் முதன்மையானவர் தான் திரு சாக்கோ கிளீலேத்து அவர்கள். இறைவனையே தனது முன்னவராகக் கண்டு தனது குடும்பத்தாரை விட இறைவனையும் திருச்சபையையும் அன்பு செய்த ஆளுமை கொண்டவர். பெதனி சாக்கோச்சன் எனவும் மானேஜர் சாக்கோச்சன் எனவும் செல்லப் பெயர்களால் இவர் அழைக்கப்பட்டிருந்தார். பேராயர் மார் இவானியோஸ் அவர்களோடு முதன்முதலில் மறு ஒன்றிப்படைந்த ஐவருள் ஒருவர் இவர் ஆவார். திருச்சபை வரலாற்றில் புதிய தலைமுறையினரால் அறியாதவரும் பழைய தலைமுறையினரின் அணையா விளக்காய் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஆளுமை கொண்டவர். கிளீலேத்து கீவர்கீஸ் மற்றும் பேராயர் மார் இவானியோசின் தந்தையின் சகோதர்ரான சாக்கோ பணிக்கரின் மூத்த மகளாகிய ஆண்டம்மா இவர்களது மூன்று பிள்ளைகளுள் இரண்டாவது மகனாக 1888 அக்டோபர் 29 ஆம் நாளில் கீவர்கீஸ் சாக்கோ (கிளீலேத்து சாக்கோ) பிறந்தார். தனது சிறு பாலர் பருவத்திலேயே தனது தகப்பனாரை இழந்தார். அவரது தாய் ஆண்டம்மா தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தந்தையின் இல்லமான பணிக்கர் வீட்டிற...

தலைமைக் குருக்கள் ஏன் சிவப்பு நிற அங்கியை அணிகின்றனர்?

  தலைமைக் குருக்கள் ஏன் சிவப்பு நிற அங்கியை அணிகின்றனர்?  துறவிகள் சாதரணமாக கருப்பு நிற அங்கிகளை அணிவார்கள்.  1. தியாகியின் சின்னம்.  தொடக்க காலத்தில் ஆயர்கள் அனைவரும் தியாகிகளாக இறந்தனர். இதன் நினைவாகவும், இரத்தம் சிந்தவும், மெசியாவுக்கு சாட்சியாக இருக்கவும் தயாராக இருப்பதன் அடையாளமாகவும் சிவப்பு நிற அங்கி அணியப்படுகிறது. தியாகிகளின் நினைவுச்சின்னங்களுக்கு வணங்குவதன் மூலம் கிழக்குத் திருஅவையில் ஆலய அர்ச்சிப்பு ஆரம்பமாகின்றது.  2. ஆயர் மெசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.  இயேசு தனது துன்பத்தின் போது சிவப்பு அங்கியை அணிந்திருந்தார், மேலும் ஏசாயா புத்தகத்தில் உள்ள மெசியா பற்றிய இறைவாக்குகளில், அவர் சிவப்பு அங்கி அணிந்து வருவார் என்று முன்குறிக்கப்பட்டுள்ளது.  3. துறவிகளின் ராஜகீய உடையாகவும் சிவப்பு அங்கியை அணிகின்றார்கள்.