Posts

Showing posts from March, 2025

மறையுரை 23.3.2025 - மத் 15: 21-28 (கானானிய பெண்ணின் மகளை குணப்படுத்தல்)

Image
  மறையுரை 23.3.2025 - மத் 15: 21-28 (கானானிய பெண்ணின் மகளை குணப்படுத்தல்) தந்தை மகன் தூய ஆவிக்கு புகழ் உண்டாகுக ஆமீன். தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஆண்டவர் கானானிய பெண்ணின் மகளை குணப்படுத்திய நிகழ்வை சிந்தனைக்காக திருஅவை நமக்கு தந்திருக்கின்றது. திருத்தூதர் மத்தேயு 15 ஆம் அதிகாரம் 21 முதல் 28 வரை உள்ள இறைவார்த்தைகளை கேட்போம். 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர் , சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.             22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து , " ஐயா , தாவிதீன் மகனே , எனக்கு இரங்கும் ; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். 23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி , " நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே , இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். 24 அவரோ மறுமொழியாக , " இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார். 25 ஆனால் அ...

குருவானவர்கள் பலிபீடத்தை முத்தமிடுவது ஏன்?

Image
  குருவானவர்கள் பலிபீடத்தை முத்தமிடுவது ஏன்?  1.         ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக மதங்கள் ஒவ்வொன்றிலும் புனிதமான மற்றும் புனிதத்திற்குரிய பொருட்களை முத்தமிடுதல் பழமையான ஒரு செயலாகும். பழங்கால கலாச்சாரத்தில் முத்தமிடுதல் என்பது மதிப்பு வழங்குதல் மற்றும் வாழ்த்து கூறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. “தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன . ” (உரோமையர் 16 : 16 ) 2.         பலிபீடம் கிறிஸ்துவின் உடனிருப்பின் அடையாளமாக உள்ளது. கத்தோலிக்க திருஅவையில் நற்கருணை என்னும் தியாகப்பலியானது பலிபீடத்தில் நிறைவேற்றப்படுகிறது. பலிபீடம் கிறிஸ்துவின் உடனிருப்பை எடுத்துக்காட்டுவதுடன் திருச்சபையின் மூலைக்கல்லாகவும் உள்ளது. “திருத்தூதர்கள் , இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும் , கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள் . ” (எபேசியர் 2: 20 ) 3.         பலிபீடத்தை முத்தமிடுவதன் மூலம் அத்தூய பகுத...

அரிமத்தியா ஊரான்.... என்பதன் சுறியானிப் பாடல்

Image
  ஹத் கப்றோ தஷ்மே ஹோ-வோ யவ்ஸேஃப் மென் றொம்தோ த்கின் ஹ்வோ தூபோறா ஏசல்ஹூவோ ப் ஓ மென் ஃபீலாத்தோஸ் த் நேத்தல் லே ஃபகறே தம்ஷீஹோ தாயோனோ ஹோப்லீ ஃபகறது ஃபோரூக்கான் சிம்தொது குல் தூப்கீன் தீசல் ஏ அஃப் ஈ ஈ யூதோயே ஸ்லாபூய் அல்கய்ஸோ ஓ ஓ வ்ல்லீ ஹாபோய் த்மேனேஹ் எத்பாசாம்

23 கத்தோலிக்க கிழக்குத் திருஅவைகள்

Image
  23 கத்தோலிக்க கிழக்குத் திருஅவைகள் அலக்சாந்திரியா திருவழிபாடு 1.         கோப்டிக் கத்தோலிக்கத் திருச்சபை ( Coptik Catholic Church) 2.         எத்தியோப்பிய கத்தோலிக்கத் திருச்சபை ( Ethiopian catholic Church) 3.         எரித்திரேய கத்தோலிக்கத் திருச்சபை ( Erithrean Catholic Church) அந்தியோக்கியா திருவழிபாடு 4.         மாறோணித்து கத்தோலிக்கத் திருச்சபை (Maronite Catholic Church) 5.         சிறியன் கத்தோலிக்கத் திருச்சபை ( Syrian Catholic Church) 6.         மலங்கரை சிறியன் கத்தோலிக்கத் திருச்சபை ( Syro Malankara Catholic Church) அர்மேனியா திருவழிபாடு 7.         அர்மேனிய கத்தோலிக்கத் திருச்சபை ( Armenian Catholic Church) கல்தேயா திருவழிபாடு 8.         கல்தேய கத்தோலிக்கத் திருச்சபை ( Cha...

தவக்காலம் 50 நாட்களா? 40 நாட்களா?

  தவக்காலம் 50 நாட்களா? 40 நாட்களா? மலங்கரை கத்தோலிக்க திருஅவையினரின் மரபுப்படி குறிப்பாக கிழக்குத் திருஅவைகளில் சுபுக்கோனோ திங்கள் முதல் தவக்காலம் அல்லது பெரிய நோன்பு காலம் துவங்குகிறது. மேற்குத் திருச்சபையினரின் இலத்தீன் கத்தோலிக்க திருவழிபாட்டு மரபின்படி புதன்கிழமை அதாவது சாம்பல் புதனன்று தவக்காலம் துவங்குகின்றது. சாம்பல் புதனன்று குருத்தோலை ஞாயிறன்று ஆசீர்வதிக்கப்பட்ட உலர்ந்த ஓலைகளை எரிக்கச் செய்து அதன் சாம்பலை நோன்பு இருப்பவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தால் வரையக்கூடிய நிகழ்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சாம்பல் புதன் முதல் துக்க சனி வரையிலான 40 நாட்களை தவக்காலமாக அனுசரிக்கின்றனர். தவக்காலத்திற்கு இடையே வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளை தவக்கால ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது சிறு உயிர்ப்புத் திருநாளாக அனுசரிக்கின்றார்கள். அதாவது உயிர்ப்பு தினத்தைப் போன்று முக்கிய தினமாக இருப்பதனால் அன்று அவர்கள் நோன்பு அனுசரிப்பதில்லை. அவ்வாறு சாம்பல் புதன் முதல் துக்க சனி வரையிலான 40 நாட்களை அவர்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றார்கள். மலங்கரை கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்குத் திருஅ...

“பேத்தர்த்தா”

  “பேத்தர்த்தா” “பேத்தர்த்தா” என்பது சுறியானிக் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவங்குவதற்கு முந்தைய நாளில் பல்வேறு விதமான அறுசுவை உணவுகளைத் தயாரித்து விருந்துண்டு மகிழ்ந்திருக்கும் நிகழ்வு ஆகும். 1.        கடந்து செல்லுதல் அல்லது முடிவுறுதல் என அர்த்தம் கொண்ட “ஃபித்தர்” (ftar) மற்றும் உணவருந்தும் மேசை என அர்த்தம் கொண்ட “ஃபோத்தூறோ” (fothooro) என்ற சுறியானிச் சொற்களிலிருந்து தான் பேத்தர்த்தா என்ற சொல் உருவாகியுள்ளது. 2.        இச்சொல் முடிந்தது என அர்த்தம் கொண்ட “பேத்ருதா” என்ற சுறியானி மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகவும் குறிப்பிடப்படுகிறது. 3.        பேத்றுதா என்ற சொல்லுக்கு திரும்பிப் பார்த்தல் என்ற அர்த்தமும் உண்டு. நமது வாழ்வு நிலைகளை திரும்பிப் பார்த்து சுய பரிசோதனைக்கு உட்படுத்தவும் இறைவனோடு இணைவதற்குரிய ஒரு வாய்ப்பாக பயன்படுத்தக்கூடிய நாட்களாகவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.   தவக்காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுப் பொருட்களை தயாராக்கிய பின்னர் ...