புனித வெள்ளியின் ஏழு செபப்பகுதிகள் எதைக் குறிக்கின்றன?
ஏழு செபப்பகுதிகளின் அர்த்தங்கள் :
1. காலை மன்றாட்டு - இயேசு கைது செய்யப்பட்டு தலைமைக்குருவான காய்பாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். (பாடல்களும் செதறாவும் விளக்குகின்றன)
(பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். மத்தேயு 27: 1)
2. மூன்றாம் மணி மன்றாட்டு - இயேசு பிலாத்துவின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றார். (செதறா மன்றாட்டு)
(அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். மத்தேயு 27: 2)
3. 1 ஆம் திருச்சடங்கு - இயேசு சிலுவையோடு கொல்கொத்தா மலை நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றார். (சிலுவைப்பாதை - சீயோன் அரணில் நின்றேசு பாடல் - ஊறாறா மாற்றப்படுகிறது)
(அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். மத்தேயு 27: 28)
4. ஆறாம் மணி மன்றாட்டு - இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார். (கோகுல்த்தாவின் சிலுவையில் ஊறாறா மற்றும் மர்வஹாஸா இல்லை)
(அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். மத்தேயு 27: 31)
5. ஒன்பதாம் மணி மன்றாட்டு - இயேசுவின் இறப்பு (மெழுகுவர்த்திகள் அணைக்கப்படுகின்றன)
திருடர்களின் உரையாடல் பாடல் குறிப்பிடத்தக்கது - புனித வார செப முறை பக்கம் - 361
(அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மத்தேயு 27: 44, 45)
6. 2 ஆம் திருச்சடங்கு - மரியாவின் மடியில் கிடத்தப்பட்ட இயேசுவின் உடலுக்கு பிரியாவிடை செலுத்துதல் (சிலுவை முத்தம்)
(விவிலிய அடிப்படை இல்லை என்றாலும் மருகள் நம்புகின்றன. பியாத்தா என்ற கலைவடிவம் சிறந்த எடுத்துக்காட்டு)
7. 3 ஆம் திருச்சடங்கு - அரிமத்தியாவின் யோசேப்பும் நிக்கோதேமும் இயேசுவின் உடலை அடக்கம் செய்தல் (திரையிட்ட பின்னர் மறைவான அடக்கத் திருச்சடங்கு
(யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். மத்தேயு 27: 59, 60)

.jpg)


.jpg)
Comments
Post a Comment