மறையுரை 18.5. 2025 லூக் 24 36 - 49
28. மறையுரை 18.5. 2025
லூக் 24 36 - 49
36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள்
நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார்.
37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக்
காண்பதாய் நினைத்தார்கள்.
38 அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு
உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்?
39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே" என்று அவர்களிடம் கூறினார்;
40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும்
அவர்களுக்குக் காண்பித்தார்.
41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது
அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம்
ஏதேனும் உண்டா?" என்று கேட்டார்.
42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம்
கொடுத்தார்கள்.
43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, "மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும்
திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும்
என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார்;
45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய
மனக்கண்களைத் திறந்தார்.
46 அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47
'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால்
பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
49
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள்
உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே
இருங்கள்" என்றார்.
“மகிழ்வின் நற்செய்தி” 28 ஆம் தொடருக்கு
உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். லூக்கா எழுதிய நற்செய்தி 24 ஆம்
அதிகாரம் 36 முதல் 49 வரை உள்ள இறைவார்த்தைப் பகுதிகளை நாம் வாசிக்கக் கேட்டோம்.
எதிர் நோக்கற்ற உணர்வோடு எம்மாவு நோக்கி
நடந்து வழிப்பயணம் செய்து வந்த சீடர்கள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும்
அவர்களுள் இறை ஆர்வத்தை ஊட்டி எதிர் நோக்கோடு திரும்பி வரச் செய்த இயேசு அவர்களது
வாழ்வை கொண்டாட்டமாக (செலிப்ரேஷனாக) மாற்றி அமைத்தார். இந்த பேரார்வத்தால் அவர்கள்
இரவென்றோ பகலென்றோ பசி என்றோ உணர்ந்து கொள்ளாமல் நடு இரவிலேயே தங்களுடைய பயணத்தை
அப்பகுதியில் நிறுத்திவிட்டு திரும்பி வந்தார்கள். தாங்கள் விட்டு வந்த
திருத்தூதர் குழுமத்தில் வந்து ஒன்றிணைந்தார்கள்.
பின்னர் மீண்டும் இயேசு அவர்களுக்கு தோன்றிய நிகழ்வைத்தான்
நாம் இன்று வாசிக்கக் கேட்டோம்.
இப்பகுதியின் முன்னுரையில் இறைவன் இயேசு கிறிஸ்து மீண்டும்
எடுத்துரைத்த செய்தியாவது: மானிட மகன் இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்பது இறைவனின்
திருவிருப்பமும் இறைவனின் திட்டமுமாக அமைந்திருந்தது. It was a divine necessity, It
was not a choice. It was the decision of God. அஃது அவ்வாறே
நிறைவேற வேண்டி இருந்தது. இயேசு கிறிஸ்து திருத்தூதர்களோடு தனது திருப்பாடுகள்
மரணம் உயிர்ப்பு பற்றி பல முறை அவர் எடுத்துரைத்துள்ளார்.
எடுத்துக்காட்டாக லூக்கா 9:22 ல்
“மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம்
நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.”
மீண்டும் அவர் இவ்வாறு கூறினார்
லூக் 9: 44,45
44 "நான் சொல்வதைக் கேட்டு மனத்தில்
வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில்
ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார்.
45 அவர்கள் அவர் சொன்னதைப்
புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது.
ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
1.
முதலாவதாக அவர்களுடைய கண்கள்
மூடப்பட்டிருந்தன.
2.
இரண்டாவதாக இத்தகைய விடயங்களைப்
பற்றி பேசுவதற்கு திருத்தூதர்கள் தைரியம் இல்லாதவர்களாகவும் துணிவற்றவர்களாகவும்
இருந்தார்கள். திருவிவிலியத்தின் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இயேசு
கிறிஸ்துவில் மட்டுமே அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டுள்ளது. இயேசு
கிறிஸ்துவின் திருப்பாடுகள் மற்றும் மரணம் போன்றவற்றில் திருவிவிலியத்தின் முழு
அர்த்தத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
3.
மூன்றாவதாக, யார் திருவிவிலியத்துக்கு
உண்மையாகவே விளக்கம் தருபவர்? Inderpractor? Jesus Christ is the
ultimate interpreter of the meaning and trust of the scripture. இயேசு கிறிஸ்து தானே இறை வார்த்தையை விளக்கிக் கூறுகின்ற போது, இது அவ்வாறு ஆகலாம், அது இவ்வாறு ஆகலாம் என நாம்
மாற்றிக் கூற வேண்டிய தேவையே இல்லை. இயேசு கிறிஸ்து எதை விளக்கி கூறியிருக்கிறாரோ
அதுதான் மிகவும் உயர்ந்த விளக்கவுரை. Ultimate. அதற்கு அடுத்தபடியாக எதுவுமே இல்லை. இயேசு
கிறிஸ்துவே இங்கு விளக்கவுரையாளராகவும் விரிவுரையாளராகவும் எடுத்துரைப்பவராகவும்
திருக்காட்சி அருளுகின்றார்.
நற்செய்திப் பகுதியில்
As they were speaking. இயேசு உயிர்த்தெழுந்தார். நாம் அதனைக் கண்டோம். பேதுருவுக்கு அவர் தோன்றினார்
என அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுடைய மத்தியில் வந்து
நின்றார்.
Standing
is the posture of resurrection. எடுத்துக்காட்டாக திருவெளிப்பாடு நூலில் “அந்த
நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது
காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள்
மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.” தி வெ 5:6
இந்த இறை வார்த்தையில் அந்த
ஆட்டுக்குட்டியின் கழுத்து வழியாக கத்தி ஒன்று குத்தப்பட்டு ரத்தம் வடிந்து
கொண்டிருந்தது. கொல்லப்பட்ட இந்த ஆட்டுக்குட்டி நான்கு கால்களில் நிற்பதைக்
கண்டேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறே திருவெளிப்பாடு நூலின் முதல்
பகுதியில் ஏழு தீபங்களின் நடுவே நடக்கக்கூடிய ஒருவராக இயேசு கிறிஸ்து
சித்தரிக்கப்படுகிறார். ஏழு தீபங்கள் ஏழு சபைகளின் அடையாளங்களாகும். அன்று ஆசிய
மைனரில் திருத்தூதர் பவுலும் மற்ற
திருத்தூதர்களும் நிறுவிய ஏழு திருச்சபைகளின் நடுவே நடக்கக்கூடிய உயிர்த்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்.
அவ்வாறு இங்கு திருத்தூதர்கள் இயேசு
கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அறைக் கதவுகள் மூடப்பட்டச்
சூழலில் உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுடைய மத்தியில் வந்து நின்றார்.
பின்னர் உயிர்த்த கிறிஸ்து முதலில்
அவர்களோடு அறிவித்த செய்தி என்பது: “Peace be with you - உங்களுக்கு அமைதி உரித்தாக”
இது யூதர்களைப் பொறுத்தவரையில் காலை வணக்கம்
கூறுவதைப் போன்று சாதாரணமான ஒரு வாழ்த்துச் சொல் ஆகும். சாலோம் என்ற சொல் தான்
அந்த வாழ்த்துச் சொல். சாலோம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. சலாம்
அலைக்கும் எனக் கூறுகின்ற சாலம் என்ற சொல்லும், சுறியானியில் சொல்லப்படும் ஸ்லோமோ
என்ற சொல்லும் எபிரேய மொழியில் ஷாலோம் என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தைக் கொண்டுள்ளன.
சாலமோன் என்று கூறுகின்ற போதும் அமைதியின் அரசர் என்று தான் அர்த்தம் உள்ளது.
இவ்வாறு மிகவும் அர்த்தம் செறிந்த ஒரு சொல்
தான் ஷாலோம் என்ற சொல்லாக திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் அவர் நமது அமைதி
ஆனவராவார் என்றார்.
“ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே
இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து,
அவர்களை ஒன்றுபடுத்தினார். எபேசியர் 2: 14”
இயேசு நமக்கு அமைதி அருளினார் என்பது
மட்டுமல்ல அவரே அமைதி ஆனவரும் ஆவார். ஏனெனில் அவர் இவ்வுலகில் சாதாரணமாக அமைவதற்கு
மாறாக இறைவனையும் மனிதனையும் ஒன்றிணையச் செய்தார். மட்டுமல்ல மனிதர்களையும்
ஒருவருக்கிடையே ஒருவருக்கொருவர் ஒன்றிணையச் செய்தார்.
இங்கு அண்மையில் உள்ளவர்கள் என்பவர்கள்
யூதர்களும் தொலைவில் உள்ளவர்கள் என்பவர்கள் பிறயினத்தைச் சார்ந்தவர்களும் அவர். யூதர்களுக்கும்
பிற இனத்தவர்களுக்கும் இடையே கட்டப்பட்டிருந்த மதிற்சுவரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து
தகர்த்தெறிந்தார். என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் இயேசு இவ்வாறு கூறினார்
“27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என்
அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும்
அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள
வேண்டாம். யோவான் 14 : 27”
உலகம் எவ்வாறு அமைதியை புரிந்து கொள்கிறது. குடும்பத்தில்
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்ற போது குடும்பத்தில்
அமைதி எண்மை ஏற்படுகிறது என புரிந்து கொள்கிறோம். பெற்றோரும் பிள்ளைகளுக்கும்
இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்ற போது அங்கும் கலகங்கள் அமைதியின்மை
ஏற்படுகின்றன. இந்தியாவும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படுகின்ற போது அமைதியின்மை
சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு தான் அமைதியை நாம் புரிந்து கொள்கிறோம். சண்டை
சச்சரவுகளும் கலகங்களும் வன்முறைகளும் இல்லாத ஒரு சூழல்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய அமைதியை சண்டை
சச்சரவுகள் இல்லாத ஒரு சூழல் என நாம் புரிந்து கொள்ளுதல் ஆகாது. இந்த அமைதியை
இயேசுவே என நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
இந்த அமைதி இறைவனுக்கும் மனிதனுக்கும் மனிதனுக்கும்
மனிதனுக்கும் இடையே இறைவனால் நிறுவப்பட்டது ஆகும். இந்த உறவினை இயேசு தனது
மரணத்தால் பெற்றுக் கொண்டார். வேறு எந்த ஒரு மதத் தலைவருக்கும் கூற முடியாத ஒரு
சிந்தனையும் ஒரு கொள்கையும் தான் இது. இயேசு மட்டுமே உலகத்திற்காக இறக்கவும்
பகைமையிலிருந்து மீட்டு இறைவனோடு ஒன்றிணையச் செய்தார். அவ்வாறு நாம் அமைதியை
பெற்றுக் கொண்டோம்.
இயேசு கிறிஸ்து அமைதியை கூறி வாழ்த்தினார்
எனினும் சீடர்களின் மன குழப்பத்தையும் அவர் எடுத்து விளக்கினார். இங்கு சீடர்களின்
மனதளையை எடுத்துக் கூறுவதற்காக இரண்டு வினைச்சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. They were terrified and
frightened.
இன்றைய சூழலில் திருத்தூதர்கள் அச்சம்
கொண்டனர் என குறிப்பிட்டார் என்பது போதுமானதாக இருந்தது. ஆனால் அதனுடைய நிலையை
சற்று அதிகமாக அவர்கள் அச்சம் கொண்ட நிலையை சற்று அதிகமான நிலையில்
விளக்குவதற்காகத்தான் திகிலிற்று அச்சம் நிறைந்தவர்களாக என குறிப்பிடப்படுகிறது. மலையாள
மொழியிலான விவிலியத்தில் அவர்கள் அச்சத்தால் நடுக்கம் கொண்டனர் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது நவீன வாழ்விலும் பேய்க் கதைகள்
பூதங்களைப் பற்றிய கதைகள். அலைந்து திரிகின்ற பிணங்களின் கதைகளைக் கேட்கின்ற போது
பல மக்களும் பயம் கொள்கிறார்கள். கல்வியறிவிலும் நாகரிகத்திலும் சிறந்து
விளங்குகின்ற இன்றைய காலகட்டத்திலே பல நபர்களும் பயம் கொள்கிறார்கள் என்றால் 2000
ஆண்டுகளுக்கு முன்னர் கல்வியறிவும் அறிவியல் அறிவும் இல்லாத ஒரு சூழலில் வளர்ச்சி
பெறாத சூழலில் மனிதனுக்கு பேய்களைப் பற்றியும் பிணங்களைப் பற்றியும் அதிகமான
அச்சம் காணப்பட்டது. இயேசு அவர்களோடு அமைதியை வாழ்த்தினார் என்றாலும் அவர்கள்
அச்சம் கொண்டனர்.
திருத்தூதர்கள் கொண்டிருந்த மனநிலையை
ஆண்டவர் இயேசு கிறிஸ்து புரிந்து கொண்டார். அவர்கள் கண்டடைந்தவை அனைத்தும்
அவர்களுடைய உள்ளங்களிலேயே அதிகமாக புகுந்து கொண்டே இருந்தன. அவை மிகப்பெரிய
தாக்கத்தையும் ஏற்படுத்தின. அவர்களுடைய மனதில் ஐயம் மேலிட்டது. இவர் ஒரு ஆவியா
இல்லை மனிதனா. உண்மையாகவே இவர் நமது குருவா இல்லை இது மாயத் தோற்றமா? இவ்வாறு
அவர்களுடைய மனதில் பல்வேறு விதமான எண்ண அலைகள் வீசிக் கொண்டிருந்தபோது இயேசு
அவர்களோடு கூறினார் நீங்கள் வந்து என்னை தொட்டுப் பாருங்கள்.
இயேசு உயிர்ப்பின் விடியற்காலையில் மரியமக்தலேனா
இயேசுவின் பாதத்தில் வந்து கட்டிப்பிடித்து அழுதபோது இயேசு கூறினார் நீ என்னை தொட
வேண்டாம். இங்கு தொடுதல் என்பது சாதாரணமான விரலால் தொடுதல் என்பது அல்ல. அவருடைய
பாதங்களில் வந்து கட்டிப்பிடித்தார். அவர் அவரோடு கூறினார் இப்போது நீ அழுது
புலம்ப வேண்டிய நேரம் அல்ல இந்த நற்செய்தியை நீ சென்று பறைசாற்ற வேண்டும். நீ
ஓடோடி சென்று எனது சகோதரர்களோடு இன்று செய்தியை எடுத்துக் கூறவும். இதுதான் எனது
முதல் பணியான கட்டளை. நீ ஓய்வெடுக்க வேண்டிய நேரம் அல்ல ஓடோடிச் சென்று இந்த
கட்டளையை நிறைவேற்ற வேண்டும். ஓடிச்சென்று இச்செய்தியை அறிவிக்கவும்.
அன்று ஆண்டவர் தொட வேண்டாம் என்று மறுத்துழைத்தபோது
இன்று ஆண்டவர் அவர்களோடு கூறுகின்றார்; வாருங்கள் வந்து சோதித்துப் பாருங்கள். எனது
உடலில் ஏற்பட்ட காயங்களை வந்து பாருங்கள். ஆவிகளுக்கு எலும்பும் சதைகளும் இல்லையே
வந்து பாருங்கள். எனது உடலின் வெப்பத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆனந்தத்தின் காரணமாக அவர்கள் அவரை
நம்பவில்லை என குறிப்பிடப்படுகிறது. நற்செய்தி பகுதியில் பல இடங்களில்
நற்செய்தியாளர்கள் ஒரு சில அசாதாரணமான நிலைகளை கூட்டிச் சேர்க்கின்றார்கள்.
அவர்களுடைய நம்பிக்கையின்மையால் அவர்கள்
நம்பாதனை மகிழ்ச்சியால் மகிழ்ச்சி மேலிட்டு அவர்கள் நம்பவில்லை என
எடுத்துரைக்கப்படுகிறது.
ஒரு சில நேரங்களில் அவ்வாறு நடைபெறலாம். நான்
தேர்வில் வெற்றி பெறவே மாட்டேன் என எண்ணவும் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளி
வருகின்ற போது முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெறவும் செய்கின்றபோது உடனடியாக
நம்மால் அதனை நம்புவதற்கு முடிவதில்லை. இவ்வாறே தான் மகிழ்ச்சி மேலிட்டவர்களாய்
அவர்கள் நம்பவில்லை.
லூக்கா 22 45 பின்வருமாறு
குறிப்பிடப்படுகிறது:
“45 அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம்
வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.”
ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஓரிருமுறை
திருத்தூதர்களை வந்து நோக்குகின்றார். அவர்கள் தூங்கிக் கொண்டே இருந்தார்கள். அப்போது
நற்செய்தியாளர்கள் இதனை எடுத்துரைத்த விதம் என்பது துயரத்தால் சோர்வுற்று
தூங்குவதாக எடுத்துரைக்கின்றார்கள்.
மேலும் மார்க்கு நற்செய்தி 14: 40 ல்
பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:
“40 அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக்
கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி
கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.”
நமது கண்கள் தூக்க கலக்கத்தோடு இருக்கின்ற
போதுதான் நாம் தூங்க செல்கின்றோம் இது சாதாரணமான ஒரு நிலை. சற்று
வியப்புக்குரியதாக இவ்வாறு எடுத்துக் கூறுவது நற்செய்தியாளர்களின் சாதாரணமான ஒரு
நிலை ஆகும். எனவே மகிழ்ச்சி மேலிட்டவர்களாய் அவர்களால் நம்ப முடியவில்லை என சற்று
வித்தியாசமான முறையில் நற்செய்தியாளர் இதனை எடுத்தியம்புகின்றார். ஆண்டவர்
யோவானின் 20 19 முதல் 29 வரை உள்ள இறை வார்த்தை பகுதிகளில் இவை சற்று விளக்கமாக
எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
உண்பதற்கு ஏதேனும் தின்பண்டங்கள்
இருக்கின்றனவா என கேட்கின்றார். உண்பதற்கு ஏதேனும் இங்கு உண்டா என கேட்கின்றார். திருத்தூதர்கள்
அவர்களுடைய உணவை உட்கொண்ட பின்னர் நீதி வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒரு மீன் தொண்டு
வந்து இயேசு கிறிஸ்துவுக்கு வழங்குகின்றார்கள். இயேசுவும் அதனை உட்கொள்கின்றார். உயிர்த்த
சூழலில் இயேசு அதனை உட்கொள்ள வேண்டிய தேவையில்லை. இருப்பினும் அவர்களை நம்ப
வைப்பதற்காக அவர் அதனை உட்கொண்டார். தான் உடலோடு தான் உயிர்த்தெழுந்து உள்ளேன்
என்பதை காட்டுவதற்காக தான். ஆவி மட்டும் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவதற்காக தான்
இதனை அவர் இவ்வாறு செய்து காட்டினார்.
இங்கு பழங்கால ஒரு சில விவிலிய எழுத்துப்
பிரதிகளில் (Manuscript)
வேகவைத்த மீன் துண்டு மட்டுமல்ல, தேன் கட்டையையும்
உட்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய எந்த ஒரு விவிலிய நூலிலும் இந்த
சொற்கள் இணைக்கப்படவில்லை. விவிலிய ஆராய்ச்சியாளர்களுக்கு இதனை நன்றாக புரிந்து
கொள்ள முடியும். விவிலியம் மற்றும் விவிலிய மூலப் பிரதிகளின் வித்தியாசங்களை இவ்வாறு
புரிந்து கொள்ள முடியும். பலவிதமான எழுத்துப் பிரதிகளை ஒருங்கிணைத்து தான் இன்றைய திருவிவிலியத்தை
உருவாக்கியுள்ளனர்.
ஒரு சில பிரதிகளில் காணப்படும் சொற்கள் மற்றொரு பிரதியில்
காண வேண்டும் என்பது அத்தியாவசியமாக இல்லை. அவை ஒத்துப் போகும் நிலையிலும் இருந்திருக்கவில்லை.
எனவே தான் திருச்சபை ஒரு சில காரியங்களை திருவிவிலியத்தில் இணைக்காமலும் மாற்றியமைக்கவும்
செய்துள்ளன. இவ்வாறு மாற்றப்பட்டவற்றுள் ஒன்று தான் வேகவைத்த மீன் உணவோடு இணைந்து
தேன் கட்டையையும் உண்டதாக எழுதப்பட்டிருந்த சூழல்.
தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவுப்
பொருள் ஆகும். 2 சாலமோன் நூலில் சவுல் அரசர் படைவீரர்களிடம் போரில் வெற்றி
பெறுவதற்காக நாம் ஒரு தினம் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும் எனக் கூறுகிறார். அன்றைய
நாள் காட்டில் எதுவும் அவர்கள் உண்ணவில்லை. அப்போது சோர்வுற்றிருந்த சவுலின் மகன் சோர்வுற்ற
போது கம்பினால் அங்கிருந்த தேன்கூட்டைப் பிரித்து தேன் அதிலிருந்து ஒழுகி வர அதனை
அவன் உண்ட போது அவனது கண்கள் திறந்தன என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோர்ந்திருக்கும் நபர்களுக்கு உடனடியாக உடல் திறனை வழங்க தேனால் முடியும் என்பது
இங்கு விளக்கப்படுகிறது.
திருச்சட்டங்கள் இறைவாக்கினர்ள் மற்றும் திருப்பாடல்கள்
போன்றவற்றுள் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் இயேசுவைக் குறித்தே ஆகும். எபிரேய
மொழியில் விவிலியத்தின் பெயர் சட்டங்களும் இறைவாக்கினர்களும் என்பதாக
அமைந்திருந்தது. துவக்க காலத்தில் எபிரேய மொழியில் திருவிவிலியம் என
அழைக்கப்பட்டது. Thora et Nebium. தோரா என்றால் சட்டங்கள் என்பது அர்த்தம். நெபியும் என்றால் இறைவாக்கினர்கள்
என்பது அர்த்தம். பின்னர் கெத்துபீமும் என்பதையும் இணைத்துக் கொண்டார்கள். கெத்து
பீம் என்றால் வரலாற்று நூல்கள் என அர்த்தம் கொள்ளலாம். வரலாற்று நூல்களுள்
திருப்பாடல்களும் இணைக்கப்பட்டிருந்தன. எனவே தான் இயேசு கிறிஸ்து திருச்சட்டங்கள்
இறைவாக்குனர்கள் திருப்பாடல்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் என்னைப்
பற்றியே என்றார்.
பின்னர் அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்து
கொண்டதன் அடையாளமாக கண்கள் திறக்கப்பட்டன என குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக
கருப்பு துணியால் எனது முகத்தை மறைக்கின்ற போது என்னால் எதையும் முன் பகுதியில்
உள்ளவற்றை காண்பதற்கு முடியாது. இந்த முகத்திரையை மாற்றப்படுகின்ற நேரத்தில்
மட்டும் தான் என்னால் மற்றவற்றை காண முடியும் என்பது தான் உண்மை. இயேசு
இவ்விடத்தில் அவர்களது கண்களைத் திறந்தார் என்பதை குறிப்பிடுகின்ற போது அவர்களது
முகத்தின் முன்னால் மறைக்கப்பட்டிருந்த முகத்திரையை அகற்றினார் என்று நாம்
அர்த்தம் கொள்ள வேண்டும். இறைவாக்கு நூல்களின் வார்த்தைகளை புரிந்து கொள்ளக் கூடிய
விதத்தில் அவர்களது கண்களை இயேசு திறக்கச் செய்தார். அன்புக்குரியவர்களே விவிலியத்தைப்
பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாலும் பல ஆயிரங்கள் முறை விவிலியத்தை
வாசித்தாலும் நாம் புரிந்து கொள்ள முடியாத பல விடயங்கள் அதனுள் அடங்கியுள்ளன.
நமது திருச்சபையை சார்ந்துறாத பல மக்கள்
என்றும் விவிலியத்தை தங்களில் வைத்திருக்கவும் தினந்தோறும் அதனை வாசிக்கவும்
செய்து வருகிறார்கள்.திரு மகாத்மா காந்தி அவர்கள் மூன்று மத நூல்களான
திருவிவிலியம் குரான் மற்றும் பகவத் கீதை போன்ற மூன்று மத நூல்களிலிருந்து அவருடைய
தனி ஜெபத்திற்காக இந்த நூல்களை பயன்படுத்தி வந்தார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்
கூட இப்படி திருவிவிலியத்தை பல நேரங்களிலும் மதிப்புக்குரிய ஒரு நூலாக ஆன்மீக
நூலாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் திரு விவிலியத்திலிருந்து பல்வேறு விதமான
கருத்துக்களை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் விவிலியத்தின் புரிதல் என்பது சற்று
அதனினும் மேலானது.
நம்மைப் பொறுத்தவரையில் தினந்தோறும்
காலையில் செய்தித்தாளை வாசிப்பதைப் போன்று விவிலியத்தை வாசிப்பதனால் எந்த ஒரு
அர்த்தமும் இல்லை. எனவே தான் விவிலியத்தை வாசிப்பதற்கு முன்னால் தூய ஆவியாரோடு
அதனை ஏற்றுக் கொள்வதற்கான அருள் வேண்டி ஜெபிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால்
ஆண்டவர் நமது முகத்திரையை மாற்ற வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் இந்த விவிலியத்தின் மேலே ஒளியை பதியச்
செய்ய வேண்டும். அதனை புரிந்து கொள்வதற்கு தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்ய
வேண்டும்.
திருவெளிப்பாடு நூலில் ஆண்டவரை திறவுகோலை
தனது கைகளில் கொண்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக திருவெளிப்பாடு
3:7 ல்
"பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின்
வானதூதருக்கு இவ்வாறு எழுது; "'தூயவரும்
உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு
திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும்' கூறுவது இதுவே;”
தாவீதின் அரியணையின் மீது உள்ள திறவுகோல்
எனக் கூறுகின்ற போது அதனுடைய அதிகாரம் கொண்டிருப்பவர் என்று சித்தரிக்கப்படுகிறது.
வேறு எவரும் மூட முடியாதவாறு திறப்பவனும்
வேறு எவரும் திறக்க முடியாதவாறு மூடுபவனும் என தனிப்பட்ட விதத்தில் இது
சித்தரிக்கப்படுகிறது. தாவீதின் வீட்டின் திறவுகோல் என்பது அதிகாரத்தை
குறிப்பிடுகிறது. இயேசுவே இந்த மறை நூலை திறந்து நமக்கு தருபவர்.
இறைவனின் ஒளி எனப்படுவது
“ஆதலால், "தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே,
உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது
ஒளிர்ந்தெழுவார்" எபேசியர் 5 : 14
நானே உலகின் ஒளி என்ற இயேசு கிறிஸ்துவே
ஒளியாக திகழ்கின்றார். இந்த கிறிஸ்துவான ஒளி ஒளிரும் போது மறை நூலை நம்மால் காண
முடிகிறது. அறிந்து கொள்ளவும் முடிகிறது.
தூய ஆவியார் நமது முகத்திரையை கிழிக்கச்
செய்ய வேண்டும். திருத்தூதர் பணி நூல் 9 17 இல்
"சகோதரர் சவுலே, நீர்
வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும்
தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார்.
மீண்டும் பார்வை பெறவும் தூய ஆவியால்
ஆட்கொள்ளப்படவும் தன்னை அனுப்பப்பட்டதாக இங்கு எடுத்துக் கூறப்படுகிறது. நமது கண்கள் திறக்கப்பட வேண்டும் தூய ஆவியின்
வல்லமை நமது உள்ளத்தில் வந்திறங்க வேண்டும்.
லூக்கா நற்செய்தியைப் பொறுத்தவரையில் மறைத்தூதுப்
பணியின் கட்டளை நாம் பெற்றுக் கொள்கின்றோம்.
46 அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47 'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்'
என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால்
பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
லூக்கா 24 46 48
இங்கு எருசலேமிலிருந்து தான் இந்த
மறைப்பணிகள் துவங்கப்பட வேண்டும் என ஆண்டவர் கட்டளையிடுகின்றார். ஏனென்றால்
யூதர்கள் வழியாக மட்டுமே மீள் படைய வேண்டும் என்ற மறைநூல் வார்த்தை உள்ளது. ஏனென்றால்
இறைவன் யூத மக்களை தேர்ந்தெடுக்கவும் அந்த மக்களிடமிருந்து மீட்பரை தேர்ந்தெடுக்கவும் அவர் வழியாக உலகம்
முழுவதற்கும் பாவ விடுதலை வழங்கவும் செய்ததன் வழியாக யூத மதத்தின் மையமான எருசலேமிலிருந்து
மீட்புப் பணிச் செயல்கள் ஆரம்பிக்க வேண்டும் என கட்டாயம் இருந்தது. அவ்வாறே
பின்னர் திருச்சபையிலும் நிகழ்ந்தது.
பெந்தகோஸ்து திருநாளன்று தூய ஆவியாரை
பெற்றுக் கொண்ட பின்னர் திருத்தூதர்கள் தங்களது பணிகளை துவங்குகின்றார்கள். எதிர்நோக்கற்றவர்களாகவும்
பயம் நிறைந்தவர்கள் அச்சமற்றவர்களாகவும் இருந்த திருத்தூதர்கள் எவ்வாறு தங்களது
பணிகளை ஆரம்பித்தார்கள் என்பதை திருச்சபை வரலாறு எடுத்துக் கூறுகிறது.
கலிலேயாவிலிருந்து சென்ற ஒரு மீனவன் ரோமை
பகுதியை மையமாக்கி திருத்தூதர் பவுலும் ஆர்வம் மிகுந்த ஒரு மறைபணியாளராக விளங்க திருஅவைப்பணிகள்
உருவாகின.
ஒரு கட்டளை வழங்குகின்ற போது ஒரு உறுதிமொழி
கூட நாம் பெற்றுக் கொள்கின்றோம். அரசு நம்மோடு ஒரு பணியை செய்வதற்கு ஒப்படைக்கின்ற
போது அதனுடைய ஒரு ஆணையையும் நாம் பெற்றுக் கொள்கின்றோம். தந்தையாகிய கடவுளின்
வாக்குறுதி உங்களுக்கு வழங்கப்படுகிறது. கட்டளையை நீங்கள் பெற்றுக் கொள்கின்ற போது
கட்டளையை நிறைவேற்றுவதற்கான உறுதியையும் நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள்.
“Until you were closed with the power about remain
in the City don't move.” விண்ணிலிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்
கொள்ளும் நாள் வரையிலும் நீங்கள் அங்கேயே அமர்ந்திருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது
பத்து நாட்கள் அன்னை மரியாவின் தலைமையில் ஜெபத்தில் மூழ்கி இருந்தபோதுதான் அவர்கள்
தூய ஆவியாரை பெற்றுக் கொள்கின்றார்கள்.
“To be clothed or invested with the holy spirit. தூய ஆவியாரை அணிந்து கொள்ளும் நிலையாக இங்கு எடுத்துக் கூறப்படுகிறது.
கொலோசையர் 1: 16, 17
16 ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை,
அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர்,
ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும்
அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
17 அனைத்துக்கும் முந்தியர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன.
அனைத்தும் அவர் வழியாக அவருக்காக
படைக்கப்பட்டன என்பது இயேசு கிறிஸ்துவை ஆவார். அனைத்தும் கிறிஸ்துவில் நிறைவு
கொள்கின்றன.
இந்த கிறிஸ்துவை அறிந்து கொள்ளாதவர்கள்.
நமது வாழ்நாள் 70 அல்லது 80 ஆண்டுகள் என
விவிலியம் குறிப்பிடுகிறது. இருப்பினும் ஒரு சில நபர்கள் இன்னும் பல ஆண்டுகள்
முதுமையில் காலத்தை தள்ளினாலும் துயரங்களும் வலிகளும் நிறைந்தவையாகவே காணப்படும். நாம்
யாருக்காக எதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த இயேசு கிறிஸ்துவை அறிந்து
கொள்ளாமல் இவ்வுலகில் இருந்து வெளியேறுதல் என்பது சாத்தியமல்ல. இதுதான் வாழ்வின்
மிகப்பெரிய குறிக்கோள் ஆகும். நமது மறை தூது பணிக்கான அறிவிப்பு என்பது
தேர்ந்தெடுப்பது அல்ல இது ஒரு கட்டளை ஆகும்.
இதனை நாம் கட்டாயமாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவர்கள்
அனைவரும் அவரது எண்ணத்தின்படி பாவ விடுதலை பெற்றாக வேண்டும் இறைவனோடு ஒன்றிணைய
வேண்டும். எருசலேமின் துவங்கி உலகின் எல்லை வரையிலும் இச்செய்திகள் பறைசாற்றப்பட
வேண்டும்.
உயிர்ப்பு செய்தி குறித்து வேறு எந்த ஒரு
மதமும் இந்நாள் வரையிலும் எடுத்துரைத்ததில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமே உரிய
சிறப்பியல்புதான் உயர்த்தும் நற்செய்தி.
இந்த உயிர்ப்பின் நற்செய்தியை பறைசாற்றுவதற்கு நாம்
ஒவ்வொருவரும் ஆவியின் அருள் வரத்தால் தயாராக வேண்டும். இது ஒரு கட்டுக்கதை அல்ல.
மனிதனின் எண்ண அலைகளுக்கு மட்டுமே உட்பட்டது அல்ல வரலாற்று நிகழ்வுதான் நிகழ்வு.
இந்த நிகழ்வை சரியான விதத்தில் நாம் பறைசாற்றுவதற்கு
அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து பிறருக்கு எடுத்துக் கூறுவதற்கு நாம் அருள்
கிடைப்பதற்காக ஆவியின் அருள் கிடைக்க நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.
ஆயர் ஆபிரஹாம் மார் யூலியோஸ்
Comments
Post a Comment